என் நெஞ்சம் ஆனது ஒரு வெட்டிக்காகிதம் !

என் நெஞ்சம் ஒரு வெள்ளைக் காகிதம் !
உனைக் காணும் வரையில் !
அதுவே ஒரு கவிதைப் புத்தகம் !
உன்னிடம் பேசும் வரையில் !
அதுவே ஆனது ஒரு காதல் ஆலயம்!
நீ வந்து வசித்த வரையில் !
பின்பு அதுவே ஆனது ஒரு வெட்டிக்காகிதம்
என்னையும் சேர்த்து நீ கசக்கி எறிந்த பிறகு !