சிந்தித்தால் சிரிப்பு வரும் 1
திருமணம் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்ள நாம் செல்லும் பொழுது, பெரும்பாலும் காலணிகளை மண்டபத்திற்கு வெளியில் விட்டுவிட்டு செல்கிறோம்.
அதுபோலவே தான் இறைவனை தொழுவதற்கு ஆலயங்கள் சென்றால், ஆலய வாசலில் போட்டு விட்டு செல்கிறோம்.
காலணிகள் புதிதாக இருப்பினும் இல்லாவிடினும் சரி, எவராவது அதை அணிந்து சென்றுவிடுவரோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுவது சகஜமே !
பிறர் நம் காலணிகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க, நாம் என்ன செய்யலாம் ... யோசித்தேன் ... விடை கிடைத்தது.
இரண்டு வித காலணிகள் வைத்துக் கொண்டு, வலது காலில் ஒன்றையும், இடது காலில் வேறொன்றையும் அணிந்து சென்றால் .. திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்குமே !!