மனிதனே நில்....
அடைபட்ட வேலிக்குள் -ஆட்டு
மந்தையென வாழும் மனிதர்களே
மனம் இருப்பதை மறந்து-உன்
மனசாட்சி விற்றுப்பணம் தேடும் பித்தர்களே
சூது, பொறாமை, காமம், வஞ்சம்
எல்லாம் ஒவ்வொருவனில் தஞ்சம்
ஏய்த்துப் பிழைப்பது இரக்கமின்றி
இறைவனை பழிப்பது- காணும்
பெண்ணையெல்லாம் பள்ளிக்கழைப்பது
கூழைக்கும்பிடு போட்டுக் குழைவது
பின்னாடி சென்று முதுகில் குத்துவது
பதவிதேடிக் காலை பிடிப்பது- உன்
உதவி தேடி வருவோரை உதைப்பது
பணம் பணம் பணம் இதுவே
உன் லட்சியம் - அதனால்
மனிதனுக்கு மனிதன் அலட்சியம்
மனசாட்சி விற்று பொய்சாட்சி கூறுவான் கோர்ட்டிலே
மாங்கல்யம் விற்றுக் குடித்துவிட்டு புரளுவான் ரோட்டிலே!
பணம் தேடியலைவான் கிடைத்தாலும்
திருப்தி அடையான்!
நாடு என்பான் நம்மால் ஆனதென்பான்
அத்தனையும் விளம்பரம்- வீட்டில்
சென்று நான் என்பான்
நமக்கு நாமே நடத்தும் கண்கட்டு வித்தையிது
காக்கிச் சட்டையில் களங்கம்
காவியுடையும் அசுத்தம்
வெள்ளையுடையும் கபடம் - தேடுகிறேன்
மனிதனைத்தான்!
சமுதாய அந்தஸ்து போலிக்கவுரவம் தேடி
அடுத்தவனை ஏமாற்றி
இவனை இவனே ஏமாற்றி
வாழ்க்கையில் வசதி பெற விளம்பரம் பெற
பொருள் குவிக்க
அங்குமிங்கும் ஓடி, ஆடி முடிவில்
எஞ்ஞான்மின்றி விஞ்ஞானயுலகில்
முட்டாளாய் மெய்ஞானயுலகில்
பாவியாய் ஆவியாய் கலக்கிறார்.

