குறை குறையில்லை

குயிலோசை இனிமைக்கு ஈடுண்டோ! - எனிலது கூடுகட்டாதே! தன்குஞ்சைப் பேணாதே!
அழகுமயிலின் நடமும் நல்விருந்தாகும் - அதன்
அகவுதல் சகியாதே! இரசிக்க முடியாதே!
குறையொன்று இல்லா உயிருண்டோ-எவரிடமும்
நிறையில்லாத் தன்மை என்றுண்டோ குற்றம்நீக்கிச் சுற்றம் காண்போம்- சூழும்
பேதங்கள் நீங்க வாழ்வோம்!

எழுதியவர் : குழலோன் (22-Nov-13, 7:47 am)
சேர்த்தது : குழலோன்
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே