முத்தொள்ளாயிரம் - சேரன் 9 - நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
வருக குடநாடன் வஞ்சிக்கோ மானென்
றருகலர் எல்லாம் அறிய – வருகலாம்
உண்டா யிருக்கவங் கொண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம்! 9
பொருளுரை
இன்றைய கேரளாவின் மேற்குப் பகுதியாகிய குடநாட்டைச் சேர்ந்தவனும்,
வஞ்சி நாட்டு வேந்தனுமாகிய சேர மன்னன் வரட்டும் எனத் தலைவி கூறவும்,
அவள் அருகிலிருப்போர் எல்லோரும் அறியும்படி தலைவியிடம் ஒரு ஊடல்
உருவாகியிருந்தது.
ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த அத்தலைவி அவனை நேரில் கண்டாள்,
கண்டதும் தன் ஊடலை விட்டொழித்தாள். தலைவனிடம் கொண்ட ஊடல் நீங்கியது.
கலாம் என்பது கலகலப்பு.
வருக குடநாடன்
வருக வஞ்சிக் கோமான்
என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர்.
ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே!