என்னவோ எழுத1

என்னவோ எழுத...1

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...

ஏக்கங்களை வடித்தென்ன பயன் ஏட்டில்..
ஏமாற்றும் கயமை மலிந்ததிந்த நாட்டில்
ஏந்தவில்லை ஒழுக்கத்தை அகவீட்டில்..

பொய்யாம் மெய்யை வளர்க்க
பொய்ஆடை தரித்து
பொய்மையாய் உலவுகிறோம் மெய்யோடு...

செவி ஏக்கமாய் விளையும் சொல்மை
கவி ஆக்கமாய் உலவும் கயமை
புவி ஊக்கமாய் மலரும் பொய்மை
நாவி பாந்தமாய் கரைசேர்க்குமோ வாழ்வை...

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...??!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி.. (25-Nov-13, 12:52 pm)
பார்வை : 48

மேலே