தாய்க் கோழி பாசம் - உண்மை காட்சி நான் கண்டது

விண்ணில் வட்டமிடும் பருந்தின் பார்வை
மண்ணில் கோழி குஞ்சின் மீது
குடையாய் வந்து வீழ பார்த்துவிட்ட
தாய்க் கோழி சிறகு விரித்து குஞ்சை
அடைக் காக்க பருந்து பறந்து போனது
யார் சொன்னார் தாய் அன்பு
மானிடருக்கு உரித்தானதென்று ?
தான் மாய்ந்தாலும் குஞ்சு பிழைக்க
தாய்க் கோழி செயல் என்னைக் கவர்ந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-25, 9:07 pm)
பார்வை : 29

மேலே