சொர்க்கம் தேடுகிறான்

சொர்க்கம் ! சொர்க்கம் !
எங்கே ? எங்கே ?
தேடி கலைத்தான்
தொலைத்தான்
காமநெடியில்
தொலைந்தான்
காளை திமிரில்

வாசலும் தெரியாது
வாடையும் புரியாது
விழுந்து கிடக்க
போதையில்
வீதிகள் !

தோழனாகயெண்ணி
உணவை ஊட்டி விட
நீ துணிந்தாய்
வீதியை துறந்தது
தெருநாய் !

அங்குமிங்கும் தடுமாறி
கண்டுகொண்ட வீடு வந்து
தயங்கி நின்றான்
என்ன சொல்லி அழைப்பதென்று
தாய் பெயரை !

அர்த்தப்பிழையில்லை
" அம்மா " வென்றழைக்க
திணறுகிறான்
வார்த்தை பிழையாகுது

வழி தவறினாலும்
வாயை துடைக்குது
அன்னையுள்ளம் !

சத்தத்தை குறைத்து
கட்டிலில் படுக்க வைத்து
மின்விசிறி போடுது
தாய் மெய் !

கண்ணை மறைக்கும்
பாசத்தில் வீணாகுது
இளம் கதிர்கள்
கரை சேராத
நெல் விதையாய் !

எழுதியவர் : விஜயகுமார்.து (25-Nov-13, 3:23 pm)
பார்வை : 74

மேலே