அணையாத தீபங்கள்

முட்டாள் சிங்களவனே
ஓடு ஓடு
எங்காவது ஒரு மூலையில்
விளக்கு எரிகிறதா -என
எட்டிப்பார்.
பல்கலை கழக வாயிலில்-உன்
படையைக் குவி.
பாடசாலை வளவில்-காடையர்
கடையை விரி.
அப்பாவி மாணவரின்
சட்டைப்பையை தட்டிப்பார்.
எங்காவது ஒரு மெழுகுதிரி
ஒளிந்து இருக்கின்றதா என்று
இருந்தால்
பயங்கரவாத தடைச் சட்டத்தின்
கீழ் கைது செய்.
பனாகொடையில் அடை
முட்டிக்கு முட்டி தட்டு.
முழியை தோண்டு.
மொத்தத்தில்
நம்மை முழுதாய் கொல்
மூடனே இதை விட
வேறு எதை நீ செய்வாய்.
மாவீரர்கள்
மானமுள்ள ஒவ்வொரு
தமிழனின் மூச்சுக்
காற்றிலும் நீக்கமறக்
கலந்தவர்கள்.
கொடியவனே நீ அவர்கள்
கல்லறைகளை
கிண்டி எறி
மாவீரர்கள் -எம்
மனக் கோவில்களில்
குடியிருக்கும்
தெய்வங்கள்.
நாம் அல்லும்
பகலும்
கல்லும் உருக
கண்ணீர் மல்க
வணங்கும்
காவல் தெய்வங்கள்.
உணர்வை நெய்யாக்கி
உயிரைத் தீயாக்கி
எம் உடலில்
எரியும்
தீபங்களை
உன்னால் முடிந்தால்
அணைத்துப்பார்!

எழுதியவர் : சிவநாதன் (27-Nov-13, 10:46 pm)
பார்வை : 3257

மேலே