மதிகெட்ட மூடன்

நீள் வானாய் நிறைந்தவள்,
என்னுள் எழுந்து
எழுத்தாய் மாறாது
கருமேகம் ஒளித்த
மழைத்துளி ஆனாள்..............

காரணம் கேட்க
பொய் உரைத்தாள்........

ஓடும் நேரம் விரைந்து
ஒரு நொடியும் சிக்காது
கால ஓட்டத்தின் மாற்றத்தில்
மனித இயந்திரமாய்
மாற்றங்கள் நிறைந்து
ஊமை ஆனதாய்
என் எழுத்துக்கள்.........................

சிந்திக்க சொல்ல
உண்மை உரைத்தால்
மதிகெட்ட மூடன்
அந்த சோம்பல்
காரணமென்றாள்.............

விலகி போகச் சொல்ல
விழித்துக்கொண்டாள்
ஊற்றெடுக்கும் எண்ணங்கள்
எழுத்தாய் பதிவானது..................................

எழுதியவர் : sukhanya (27-Nov-13, 9:54 pm)
பார்வை : 99

மேலே