பெண்ணோவியம்

மனமே!!
தூரிகை எடு.
மீண்டும் ஓர்
ஓவியம் வரைந்திடு.

வானம்
பூமி மீது மோகம்
சொட்டு சொட்டாய் பேசும்
மண் வாசம் வீசும்.
மரமும் கொடியும்
காதலிக்கும் வேளையிலே.

இளந்தளிர்கள்
சூரியக்காதலனை தேட
இளந்தென்றல் மோதி மோதி
குளிர் கூட்ட.
கத கதப்பான வெப்பம்
கையோடு மூட்டி மூட்டி போக
விரல்கள் ஒட்டி ஒட்டி விலக
அவளும் நானும் சேர்ந்து நடப்பதாய்!

மனமே!!
மீண்டும்
ஓவியம் தீட்டிடு.

அன்று நீ
வரைந்த பெண்ணோவியம்.
இன்று
உயிர் சுமந்து வந்தது
கண்கள் வியந்தது!!
மனமே
தவறாது தீட்டிடு!!!

- செஞ்சி மா.மணி

எழுதியவர் : செஞ்சி மா.மணி (29-Nov-13, 12:26 pm)
பார்வை : 217

மேலே