அவ ஒருதலையா காதலிச்சா ஒசத்தியா காதலிச்சா

என் உசுரு எரியும் கதை கொஞ்சம் நான் சொல்லுறேன் - என் ராசாவே உன்னைவிட்டு நான் போகுறேன்

முடியாத கெழவி ஒருத்தி ரோட்டோரமா கெடக்க
தூக்கிக்கிட்டு ஓடுன ஆசுப்பத்திரிக்கி - நீ தூக்கிக்கிட்டு
ஓடினது கெழவிய மட்டுமில்ல என் உசுரையும்தான்னு புரிஞ்சிக்கிட்டேன் இந்தச் சிறுக்கி

குமரிப்பொண்ணுங்க நாங்க ஓடையில குளிக்கையில வச்ச கண்ணு வாங்காம பாக்கும் வயசுப்பயலுவ கொள்ளிக்கண்ணு - என் மாமன் என்ன செதைக்கையில என்ன நீயும் காப்பாத்தி உன் மேல் சட்டைய கழட்டிக் கொடுத்த உன்ன தாங்க புண்ணியம் பண்ணியிருக்கணும் இந்த ஊரு கரிச மண்ணு

காசு பணம் பாத்ததால என் உசுரு உன்னப் பாடல - உன் இயேசு மனம் பாத்ததால வேற ஆம்பளைய நான் தேடல

இருந்தாலும் நீ எனக்கு இல்லா காலம் உருவாச்சி - பரவாயில்ல உனக்கு தகுதி இல்ல இந்த ஏழ கருவாச்சி

மகாராணி போல உனக்கு துணை கிடைப்பா ராசா - நீ உலக ஆளும் காலம் பாத்து பூக்கும் இந்த ரோசா

ஐயா... என் இதயம் செத்துப்போனதால என் உசுரு கூட போச்சி - உசுரு போனாலும் என்னமோ தெரியல என் காதல் மட்டும் உனக்கெனவே ஆச்சி!!!

எழுதியவர் : வசந்தா (3-Dec-13, 10:16 pm)
பார்வை : 88

மேலே