தண்ணிக்குடம் எடுத்து

தண்ணிக் குடம் எடுத்து
தனிவழியே போற புள்ள!
எண்ணி அடி எடுத்து
எண்ணுவதும் என்ன புள்ள?
முன்ன மறச்சு வச்சு--நீ
முன் னழகு ஒளிச்ச!.
பின் னழகு கொல்லும்.--உன்
முன் னழகும் சொல்லும்.
எண்ணியும் பாத்த முகம்
தண்ணி யிலும் தெரிஞ்சிருச்சோ!
உன் புருவ மையெடுத்து
என்னு ருவம் வரைஞ்சிருச்சோ!
மச்சான் இருப் பேன்னு-நீ
மறச்சு சாக்குச் சொல்லி
தண்ணிக் குடம் இடுக்கி-வந்த
தண்ணி யோட சிறுக்கி!
இன்னும் திரும் பலயே!
எனக்கும் மீச அரும்பலயோ!
பின்ன என்ன இழுக்குதடி
என்ன அது காந்தமடி!
தின்னத் தான துடிக்கு--என்ன
சித் தெறும்பு கடிக்கு.
என்ன நானும் சொல்ல-மனசு
என்னென் னமோ பண்ண.
கானக் கருங் குயிலே!
மானே மாங் கிளியே!
தேனே தீங் கனியே!
திகட்டாத செங் கரும்பே!
பேசா மத்தான் போனா-மாமன்
தாங் கானடி மீனா!
கூசா தடி வீணா!--முத்தம்
கொடுப் பனடி நானா.
அன்ன நட நடந்து
என்ன நீ கடந்து
சின்னச் சிரிப் புதிர்ந்து
மின்னும் மனங் கிடந்து.
உன்ன எண்ணி நானும்-தினம்
உருகு றேனே தானே.
நின்னு ஒன்னு சொல்லு--இல்ல
கொன்னு மண்ணு தள்ளு.
கொ.பெ.பி.அய்யா.