பூனை குட்டி
நண்பனுடன் அவனது
வீட்டிற்குச் சென்றிருந்தேன்..
வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக் கட்டிலில்
கிடந்தார்..
நண்பன் உள்ளே
போய்விட்டான்..
நான் : என்ன பாட்டி
நல்லா இருக்கிங்களா..?
பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?
நான் : நல்லாருக்கேன் பாட்டி..
இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது, பேசி முடித்தேன்..
பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?
நான் : இதுவா பாட்டி.. இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா அத அப்புடியே திரும்ப பேசும்..
பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?
நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..
பிறகு வீட்டினுள் சென்றேன்..
எல்லோருடன் பேசிவிட்டு வெளியில் வந்தேன்...
வாசலில் பாட்டி.. நான் : போயிட்டு வாரேன் பாட்டி..
பாட்டி : ராசா...
நான் : என்னா பாட்டி..?
பாட்டி : ஏய்யா, அந்த பூனகுட்டிய இங்க உட்டுட்டு போயா..
நான் : என்ன பாட்டி சொல்றீங்க..?
பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா.. நா செத்துபோறப்ப
அந்த பூனகுட்டி கிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..
(வீட்டில் உள்ள முதியோர்களிடம்
பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள் ...)