nilamagal - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : nilamagal |
இடம் | : tamil nadu |
பிறந்த தேதி | : 12-Mar-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 2876 |
புள்ளி | : 2543 |
நம் வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்வது???
மேடையொன்று கொடுத்து
கவி பாடலை எழுதவைத்து
கூவி அழைத்து பார்வைகள்
குவிய வைத்தது ..........!
ஓர் இலக்கிய களம்.
பயின்றேன்...!
எழுதினேன்...!
நன்றாகவே
வளர்ந்துக்கொண்டிருக்கிறேன்.
முகஸ்துதிக்கு பாராட்டுக்கள்
லஞ்சமாக சில பாராட்டுக்கள்
உண்மையாகவும் சில பாராட்டுக்கள்.
விஷமத்தனத்தில் சில விமர்சனங்கள்
ஏணியில் ஏறவைத்தது சில விமர்சனங்கள்.
அச்சாணி முறிந்தவிட்டதென்று
அச்சம் ஏற்றியது சில குற்றச்சாட்டுக்கள்.
இவைகளில், இவர்களின்
எந்த கள்ளும் போதை
ஏற்றிடவில்லை...!
எந்த முள்ளும் வதம்
செய்திடவில்லை...!
என்னுள் , என் பக்குவத்தின்
தலைக்குள் மூளைவீங்கி
தலைக்கணமாக ஆடிடவில்லை...!
எழுதுகோலின் மை தெளித்து
ஆவேச நாயகன் நான்
அரசியல் நாய்களை தாக்கினேன் -அதன்
வாலை வெட்டினார்கள் வாக்காளர்கள்.
எழுத்தாளன் என் எண்ணத்திற்கு
ஏராளமான வரவேற்பு மாலைகள்
”எழுதியது போதும் எழுந்து வா! ”
எதிர்பார்த்த மக்களை ஏமாற்றவில்லை.
ஏப்ரல் முதல் நாளில் - பதவி
மேடை ஏறினேன், உறுதிமொழி எடுத்தேன்
”முதலமைச்சர் சந்தோஷ் வாழ்க”
வேஷமில்லாத வாசகர்களின் கோஷங்கள்.
”முதல்வன் “ திரைப்படம் உசுப்பேற்றியது- என்
பின் தொடரும் பாதுகாப்பு வாகனங்கள் -இனி
பெண்மணிகளை தொடரும் கயவர்களை துரத்தும்.
மதுபான கடைகளில் மது விற்பனைக்கல்ல -அங்கு
இளநீரும், நொங்கும் மானிய விலைக்கு.
இலவச பொருட்கள் ஏதும் இல்ல
பூனைகள் பிரச்சாரம்
சோதனை கூடத்து எலிகளே
அம்மணமாக நிற்காதீர்
ஊர்வலம் வருது
பிச்சைகாரர்களின் பணப்பெட்டியில்
பாரததாயின் பிணவாடை..!
எவனும் கற்பழிக்கட்டும்
நாட்டுமக்களின் இலவச ஆசையில்
ஜனநாயக மங்கை !
-------------------------இரா.சந்தோஷ் குமார்.
அன்பென்ற அமுதை
ஆயிரம் முறை கொடுத்தேன்
நஞ்சென்று நினைத்து
நகர்ந்து சென்றாய்!!!
மஞ்ச கனவுமட்டும்
நெஞ்ச கடலில் !!!
எத்தனை நாளாய்
காத்திருந்தேன்
அத்தனையும் வீண்தானோ???
உன்னை மறக்க முயல்கிறேன் இப்போதும்
மடிந்து கிடக்கிறது "ஈழ தமிழினமாய்"- என் காதல்
கண்டும் காணாத தமிழகமாய் நீ!!!!
எப்படி சொல்வேன் எல்லாம் கைமீறி விட்டது
எங்கோ சென்றுவிட்டாய் என்னை மறந்து
எப்படியோ வாழப்போகிறாய் எனை துறந்து
என்னவெல்லாம் காணபோகிறாய் எனை கடந்து
எண்ணம் எங்கிலும் நீரோட்டம் அதன்
வண்ண கலவையாய் கண்ணீர்
துடைத்து வைக்கிறான் இன்னொருவன் -
என் தூரத்த
வண்ணத்து பூச்சியின் வண்ணம் போல
அதிகாலை பனித்துளி போல
அந்தி நேர வெளிச்சம் போல
அருவி சாரல் துளி போல
இரவு வானில் விண்மீன் போல
இனிய யாழின் இசை போல
இன்பதமிழின் சுவை போல
இன்னும் சொல்ல மொழி தேடி
இன்பம் சொல்ல வழி தேடி
எங்கோ கிடைத்த மொழி கூறி
என்னால் முடிந்த கவி "நன்றி"!!!!!!
*************************************************************************
{என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும் அம்மாவிற்கும் அண்ணனுக்கும் இந்த நிலவின் சிறிய "நன்றி "}}}}}
எழுதிய வார்த்தைகள் ஏராளம்
எண்ணாமல் சொன்னவை தாராளம்
எங்கோ முடிந்த வாழ்வு
எங்கோ தொடர்கிறது!!!!
ஏற்று கொண்டேன் விதியே
என் மீது நீ திணித்ததை
எல்லாரும் மகிழ்ச்சியில்
என்னுள்ளே ஏதுமில்லை!!!
என்னன்னவோ தோன்றியது
என் எண்ணத்தில்
எங்கெங்கோ அலைபாயும் மனம்
எப்படியோ போகிறது தினம்!!!
எந்த நாளும் காணாத
எந்தன் கனவு இன்று
எங்கிருந்தோ பலித்தது
எப்படி என்று புரியவில்லை
எது எப்படியோ எங்கோ
எதோ எப்பொழுதோ
எவனோ எழுதிய எழுத்து
ஏட்டில் எழுந்து நிரம்பியது என்னுள்!!!
நண்பர்கள் (154)

ஆறுமுகராஜ்
குறும்பலாப்பேரி

TP தனேஷ்
Suthumalai .Jaffna .

S.ஜெயராம் குமார்
திண்டுக்கல்

செஇராஜாராம்
நத்தம், திண்டுக்கல் மாவட்
