காதலின் கடைசி துளிகள்

உன் மூச்சி காற்று என்னை
தீண்டையிலேஒருகணம்
என்னை நான் மறந்து
தான் போனேன் ,
மறுகணம் என் கையினை
பற்றிய ஒரு ஆண்மகனும்
நீதானே,
நித்தம் என் நித்திரையில் உந்தன்
நினைவலைகள் என்னை
தாக்கையிலே கரைசேர
மனம் இன்றி உந்தன்
நினைவினில் மூழ்கி தான் போகிறேன்,
நம் காதல் எதுவென்று நீ
அறியும் வண்ணம் என்னோடு
காதல் கொண்டாய் என் வாழ்வு நீ என
தெரிந்தும் உந்தன் பெற்றோரின்
நினைவால் என்னை
மறந்து போனாயோ?
நீ இல்லா என்வாழ்வில் ஒரு
கணமும் ஒரு யுகமாக
மாறிடும் நிலையை நதியாக
மாறிடும் என் கண்கள் சொல்லுமே
நம் பிரிவினை .
இருந்தும் பத்திரமாக சென்றிரு
மணவறைக்கு நல் வாழ்வை எதிர்
பார்த்து நானும் செல்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
காட்டிற்கு அன்று உன் கையால்
சூடிடும் எருக்கம்பூ மாலைக்காக
மூச்சற்ற உயிராக உன்வரவை
எதிர் பார்த்து காத்திருப்பேன்
என் காதல்கணவனே .....

எழுதியவர் : ப்ரியாஅசோக் (11-Dec-13, 3:32 pm)
பார்வை : 186

மேலே