ஆதலினால்

இப்போதெல்லாம்
வளர்கிறது விஞ்ஞானம்
பிறழ்கிறது மனிதநேயம்..

குருதி ஓட்டத்தின்
இறுதிப் பாய்ச்சல்
முடிகையில் ...

சாய்ந்து விடுகிறது - இந்த
சதைப் பிழம்பு ;
அடங்கி விடுகிறது - அத்தனை
ஆராவாரமும் !

மாற்று வழியென்ன
மனிதம் தழைக்க...!?

--------------------------------

காதலில் இதயம் சேர்ந்தோம்;
காலம் முடிந்தபிறகும் அதை
உயில் எழுதுவோம்-
நோயாளி ஒருவனுக்கு !

நாத்திகனானாலும்
அவனுக்கு பிரம்மா
சத்தியமாய் நாமே தான் ...!

தன் குருதியில் ஒருபாதியைப்
பசு பாலாய்ச் சுரக்கிறது ;
வாழ்வின் சுருதி - மகிழ்வுடன்
நாம் செய்யும் ரத்த தானம் !

கர்ப்பத்தின் இருட்டை
கடைசிவரை சுமப்பவனுக்கு
வாழ்வின் வண்ணங்களை
நாம் தானம் கொடுப்போம் ;

உயிர் சுமக்கும் கருவறை
கழிவு நீக்கும் சிறுநீரகம்
காற்றுவாங்கும் நுரையீரல் ..

அஸ்தியாய் கரையவா?

மகிழ்வோடு தானம் செய்வோம் !

அழகுக்காய் மலர் தானம்
செய்யும் பூச்செடிகள்

ஒளிக்காய் உடல் தானம்
செய்யும் மெழுகுவர்த்தி

வெடித்த வயல்களுக்காய்
துடித்து விழும் கார்மேகம்

இவற்றினூடே
பிரளயம் தாண்டி
மனிதம் தழைக்க
மாற்று வழியென்ன...!?

ஆம்! உடலுறுப்பு தானம்..!

மனிதா நாமும்
தானம் செய்வோம் !

எழுதியவர் : நிலா நேசி (22-Dec-13, 10:16 pm)
பார்வை : 93

மேலே