கவியாழினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வசந்தகால தேவதை இவள்
பாசாங்கு இல்லா பாசக்காரி
நட்புவீதியின் ஒளிவிளக்கு இவள்
அன்பு காட்டும் நேசக்காரி.

பாரதியின் எழுதுகோல் எங்கே ? –இதோ !
இந்த “பெண்”ணின் கையில்.
வீரமையிட்டு சமுதாயதாளில்
கவியெழுதும் ”பெண் பாரதி ” இவள்

பக்குவமாய் என் இதயகூண்டில்
பாசாமாய் புகுந்த பாசக்கிளி.
பரவசமாய் என்னை எப்போதும்
அன்பாய் கொண்டாடும் வண்ணக்கிளி.

கோடி சம்பாதித்தாலும் யாருக்கும்
தேடி வராது உண்மை அன்பு.
தேடினாலும் கிடைக்காத பந்தம்
இந்த தங்கையின் அன்பு சொந்தம்.

எழுத்து தளம் கண்டெடுத்த வைரம்
தளம் எனக்கு கொடுத்த பரிசு
என் தங்கை ”கவியாழினி ” சரண்யா .

29 டிசம்பர் 2013 ல்
என் தங்கையின் பிறந்த நாள்.
எழுத்து தள உறவுகளுடன்
கைகோர்த்து வாழ்த்துகிறேன் .
------------------------------------------------------------------

அன்பு வானமென்றால்
செல்லமே ! நீயே அதில்
வெள்ளி நிலவு.
நட்பு குளமென்றால்
தங்கையே ! நீயே அதில்
தங்கத்தாமரை.


வண்ண வண்ண நிறமாக
கண்ட கனவெல்லாம் நனவாகட்டும்
எண்ணம் யாவும் நிறைவேறட்டும்.
இலட்சிய பாதையில் வீறு நடைப்போடும்
வெற்றி கோட்டையின் மகாராணியே..!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். !!
வாழ்க ! நீடுழி வாழ்க !!
வளர்க !!! வளம் பெறுக !!
---------------------------------------------------------------------------
இப்படிக்கு,

உன் அண்ணன்
-இரா.சந்தோஷ் குமார்
மற்றும்
உறவுகளும் நண்பர்களும்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (25-Dec-13, 2:22 pm)
பார்வை : 4734

மேலே