நிலாச்சோறு

ஓடி ஓடி ஊட்டிடுவாள்
உலகம் சொல்லி ஊட்டிடுவாள்
பாடிப் பாடி ஊட்டிடுவாள்
பழக்கம் சொல்லி ஊட்டிடுவாள்

அன்னம் கொஞ்சம் அன்பு கொஞ்சம்
கிண்ணம் நிறைய ஏந்திக் கொண்டு
கதைகள் சொல்லி காவியம் சொல்லி
மன்னன் நீ என்றே ஊட்டிடுவாள்

மழலை மொழியில் மயங்கிடுவாள்
மலராய் புன்னகை பூத்திடுவாள்
பிஞ்சுக் கைகள் கன்னம் கிள்ள
கொஞ்சிக் கொஞ்சிக் காட்டிடுவாள்

வீதி உலா கூட்டிச் செல்வாள்
வானின் நிலா காட்டிடுவாள்
அவள் மனம் நிறையும் வரை
என் வயிறு நிறைத்திடுவாள்.

எழுதியவர் : வெ கண்ணன் (4-Jan-14, 7:36 am)
பார்வை : 424

மேலே