தேசம்

வெள்ளகாரண்ட நாட்ட வாங்கி
கொள்ளகாரண்ட குடுத்துபுட்ட – அவன்
கொள்ளையடிச்சி கொள்ளையடிச்சி
கோடி கோடியா குமிசுபுட்டான் …

மக்களாட்சி என்று சொல்லி
மக்களை நீ எச்சுபுட்ட – ஏழை
மக்களோட வாழ்கை மட்டும்
எப்பவுமே மாறலையே …

100 ரூவா செலவு பண்ணி
நெல்லுமணி விளைய வச்சேன் –
வெளஞ்ச நெல்லை 50 ரூவாகி
அரசாங்கம் கேக்குதையா

தாத்தன் பட்ட கஷ்டத்துக்கு
பென்சன் பணம் வாங்க போனே
100 குடு பென்சன தரேன்னு
தபால்காரே சொல்லிபுட்டான்

ஜாதிச்சன்று வாங்க நானும்
வருசைல நின்னுருந்தேன் - பணத்த
அடில வச்சா நொடில முடயுனு
வி -ஏ-ஓ சொல்லிப்புட்டான்

லைசென்சு வாங்க நானு
ஒரு வாரம் நடந்துருப்பே
லஞ்சம் குடு லைசென்சு தரேன்னு
ஆர்- டி- ஓ சொல்லிப்புட்டான்

காவல் நிலையம் தேடிபோயி
உரிமைகி காத்துருந்தேன்
பையில லஞ்சம் கையில லட்டி
ரெடியா நீனு கேட்டுப்புட்டான்

அரவேட்டி கட்டிக்கிட்டு
சாக்கடைய சுத்தம் பண்ணே
அடிவயிறு நெரயகூட
அரசாங்கம் உதவலையே

சுதந்திர நாடு என்று தினம்
சொல்லுறதில் அர்த்தம் இல்ல – ஏழை
சுதந்திரமா வாழ்வதற்கு
என்னைக்குமே வழியுமில்ல.........


இலஞ்சம் இல்லா நாடு வேண்டி-என்
இலட்சியத்தில் ஒரு பயணம்

இப்படிக்கு
உணர்வாளன்
ச. தமிழழகன்

எழுதியவர் : ச.தமிழழகன் (8-Jan-14, 3:25 pm)
பார்வை : 75

மேலே