கலைந்த கனவு
கண்டாங்கி சேலைகட்டி எட்டு மடிப்பு வெச்சு எட்டெடுத்து வாரவளே....
தல நெறயா பூ வெச்சு நெத்திபூறா பொட்டு வெச்சு
நெஞ்சகிள்ள வாரவளே....
வீதியில நீ சிரிச்சு போகயில
பவளம் பிறக்குதம்மா...
நீ நடந்த இடமெல்லாம் செண்பகமும் பூக்குதம்மா....
உன் கடைக்கண் பார்வை என் நெஞ்சை தாக்குதம்மா....
என்ன பாத்தும் பாக்காம நீ பேச
உன் கண்ணு மட்டும் பாக்குதம்மா....
என் உயிர்நாடி ரெண்டும் துடிக்குதம்மா....
ஆலமரத்துக்கு நா போற பின்னாடி நீ வாணு கொசுவம் என்ன வா வாணு அழைக்குதம்மா...
நா போற நீ வாடா
யாரும் பாக்காம நீ வாடாணு
கை அசைச்சு சொல்லயில ஊர்முழுக்க நா தேட ஊரெல்லாம் கொறட்ட சத்தம்
என் காதுல ஒலிக்க
உன் கொசுவம் ஆடும் அழகுல நான்
என்ன மறந்து வாரேண்டி.....
கோயில் மணி ஓசை போல கொலுசு சத்தம் கேக்குதம்மா...
சலக்கு சத்தம் கேட்டாத்தா என் மனசு நிறையுமம்மா.....
ஆலமரம் வந்தாச்சு ஆளக்காணோணு நீ தேட உன் பின்னால நா நிக்க பயந்தபடி நீ கட்டிப்பிடிக்க உலகமே உறையுதம்மா....
என் உசரு உருளுதம்மா....
இத்தனையும் நடக்குமுணு நா தினமும் நினைக்கையில அம்மா வந்து எழுப்பி
என் கனவ கலைக்குதம்மா.....