என் காதல் அழியலாம் - அன்னையாய் வாழும் அண்ணிக்காக

என் காதல் அழியலாம்
அன்னையாய் வாழும் அண்ணிக்காக !!

எங்கோ தொலைந்த அன்னை அன்பை
இந்த விழிகள் வழியே பார்த்தேன் !!

இரவில் எந்நேரம் வந்தாலும்
உணவிட்டு மகிழும் விதத்தை
என்னவென்று சொல்வேன் - அச்சமயம்
நான் சொல்வதோ போதுமென்று
வரும் வார்த்தையோ இன்னும் கொஞ்சமென்று !!

என்றும் உழைத்தாலும்
நற்பெயர் யாதுமில்லை - அதற்காக
கண்ணீர் சிந்தாமல்
புன்னகை மட்டும் பரிசாய் தரும் அழகு !!

இன்னல்களை கூட என்னிடம்
பகிர்ந்து கொண்ட இதயம்
என்னை உருக வைத்தது !!

நான் செல்லும் போது பணம் தராமல்
அந்த கரங்கள் இருந்ததில்லை .
நான் வேண்டாம் என சொல்லி
இதயம் உடைவதை நான் விரும்பவில்லை
வாங்கி சென்றால் அந்த விழி பெறும்
சந்தோசத்தை அன்பை நான் ரசிக்கிறேன் !!
என்றும் வேண்டும் இந்த பாசம்

புது சட்டையை தோள் மீது வைத்து
"நல்லாயிருக்கா" ....."எடுத்துக்கோ "...
என சொல்லும் வார்த்தைக்கு முன்னே
என் அன்னை தோற்று போனாள் !!

என் காதலை அறிந்த முதல் ஜீவனே !!
"வாப்பா" எனும் வார்த்தையில் புன்னகை ததும்பும் !

அழுத போது என் விழி நிலை மாற்ற
நினைத்த இதயம் இங்கே தான்
தங்கை முன்வருகிறாள் !!

அதிகம் சொல்லும் வார்த்தை "சாப்பிடலாம்பா"
நீங்கள் நினைத்தாலும் நிறுத்த முடியாது !!

இப்படி அன்பை தேடி தேடி திரிந்தவனுக்கு
இதயம் வழிய வழிய தங்கையும் தங்களுமே
இன்பம் தந்தாள் என் செய்வேன் நான் !!
இருதயத்தில் இடம் தேடுகிறேன்
என் காதலுக்கு !!

ஐந்து வருடம் முன் கிடைத்த பாசம் ஏன்
அதற்க்கு முன் கிடைக்கவில்லை - பரவாயில்லை
இனியாவது நான் அழியும் வரை வேண்டும் !

தேடி வந்த சோகம் எல்லாம்
அன்பில் பட்டு அழிந்து போனது !!

இவை எல்லாம் குறைவுதான்
அன்பை சொல்ல அளவேது !!

இப்படி ஒரு அன்பிற்கு இல்லாத
கடவுள் மட்டுமில்லை இருக்கும்
என் காதல் அழியலாம்
அன்னையாய் வாழும் அண்ணிக்காக !!

மகனாய் ஏற்கா விட்டாலும் என்றும்
வாழ்வேன் மகனாய் நான் அழியும் வரை !

இனி துரத்தினாலும் செல்வதில்லை
இப்படி ஒரு அன்பை தொலைத்து !!

----------என் அண்ணிக்கு சமர்ப்பணம் -----------

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Jan-14, 10:06 am)
பார்வை : 2106

மேலே