புதுப்புது அர்த்தங்கள்-கே-எஸ்-கலை

ஆலமரங்கள்
புத்தர்களின் அமர்த்தலின் பின்
"அரச" மரங்களாகியது !
✿⊱❀
விடியவில்லை
ஊர்ஜிதப் படுத்தியது
காலைச் செய்தி !
✿⊱❀
பாதாள ஆட்சி
நெம்புகோல் புரட்சி
கபால சாட்சி !
✿⊱❀
உப்பிருந்தும்
குப்பையில் போடுகிறார்கள்
ஏழையின் கண்ணீர் !
✿⊱❀
இடைவெளி ஒருநொடி
இறப்பிற்கும் பிறப்பிற்கும்
வருடப் பிறப்பு !
✿⊱❀
அழகிய கவிதை
இலக்கணப் பிழையுடன்
வாயிலி !
✿⊱❀
பூக்களின் ரத்தம்
செடிகளின் கண்ணீர்
மனிதனுக்குப் பனி !
✿⊱❀
சுவருக்கு திரைச்சீலை
மகளுக்கு அரைச்சீலை
அது-முன்னாள் சீலை !
✿⊱❀
சமுத்திரமளவு உப்புநீர்
அணைகட்டிக் கொள்கிறது
விரல்நுனி !
✿⊱❀
நல்லபல வீணைகள்
புழுதியில்; கவலையில்லை !
இசைவாக்கம் !!
✿⊱❀