ஏனோ வரவில்லை இன்று உறக்கம் தரவில்லை

காத்திருக்கும் காலமெல்லாம்
காதல் வலி கூடுதடி
பூத்திருக்கும் விழி இரண்டும்
நீர்க்குமிழி ஆனதடி

மாலை வண்ணம் மங்குதடி
மதி அழகு கூடுதடி
காக்கை குருவி மடையான் எல்லாம்
கண் உறங்கப் போகுதடி

காற்றும் வந்து போன தடம்
பார்த்து நின்றேன் காதலியே
நித்தம் நீ வரும் நேரம்
நிழலாய் நகர்ந்து போனதடி

சுகம்தானா கண்மணியே
நலம்தானா காதலியே
மனதில் ஏதேனும்
கலக்கம் கொண்டாயோ
நெஞ்சம் வாடுதடி
உன் வரவைத் தேடுதடி..

காலம் என்னும் சேற்றினிலே
கால் இரண்டும் சிக்கி நிற்க
பாவி இவன் ஆவி மட்டும்
உன் கூடு தேடிப் போகுதடி..

எழுதியவர் : வெ கண்ணன் (22-Jan-14, 7:22 am)
பார்வை : 215

மேலே