கனவின் அழகிய உருவங்களே கவிதைகள்

காதலியின் வீட்டுக்
கதவு மூடியிருந்தாலும்...

வாசலில் பூத்திருந்த
வண்ணப் பூச்செடி.....

வசந்தமாய் தாவணி போர்த்தி
வா என்று எனை வரவேற்பதாய்....

நினைத்துப் பார்த்தபோது - அவள்
நிஜமாகவே என் மனசுக்குள் நிறைகிறாள்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Feb-14, 6:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

மேலே