பயணங்களில் சிலநேரம்

சகித்துக் கொள்கிறேன்
மனித வாடைகளை.....

பயணம் இனிதாக அமைய
வாழ்த்துக்கள் என்று
படித்தவாறு...

படிகளில் தொங்குபவனுக்காக
பதறுகிறேன்...
பதறிய நேரங்களில்
சிதறிய எண்ணங்களை
சேகரித்து வைக்க முடியாமல்

மனித வாடைகளை
சகித்துக் கொள்கிறேன்..

எழுதியவர் : கவிதை தாகம் (8-Feb-14, 9:05 pm)
பார்வை : 87

புதிய படைப்புகள்

மேலே