பயணங்களில் சிலநேரம்
சகித்துக் கொள்கிறேன்
மனித வாடைகளை.....
பயணம் இனிதாக அமைய
வாழ்த்துக்கள் என்று
படித்தவாறு...
படிகளில் தொங்குபவனுக்காக
பதறுகிறேன்...
பதறிய நேரங்களில்
சிதறிய எண்ணங்களை
சேகரித்து வைக்க முடியாமல்
மனித வாடைகளை
சகித்துக் கொள்கிறேன்..