நண்பா

என் செடியில் பூத்த பூக்கள் நீயே
உன்னை ஏனடி உதிர விட்டேன்
கனவினில் உந்தன் சுவாசம் கண்டேனே...
பட்டம் ஒன்று தான் வாங்கிக் கொண்டு
வட்டம் ஒன்றை இட்டுச் சென்று
நிலவினில் உன் முகம் பார்த்து நின்றேனே...
யானை சருக்கினில் வழுக்கி
அன்று நீ விழுந்ததை நினைத்தேன்
இதழின் ஓரத்தில் சிரிப்பாய்
இன்று கண்ணீருடன் கலந்து விட்டேன்...
கண்ணாம்பூச்சியில் அன்று
என் கண்ணை கட்டி தான் நின்று
காற்றை தூதாய்தான் அனுப்பி
நண்பா உன்னை வந்து சரணடைவேன்...
சோகம் இன்று எங்கே
அது பூவில் நுழைந்து செல்ல...
பூவிடம் கேட்ட போது
அது காற்று என்று சொல்ல...
காற்று என்ன சொல்லும்
அது மேகம் என்று சொல்ல...
மேகம் மலையாய் தூவ
என் நெஞ்ஜோடு வந்து சேர...
நீ தூக்கத்தில் உளறிய வார்த்தைகளில்
நான் கவிதை யானேனே...
இன்று உளற என்னுடன் நீயின்றி
வெறுமையாகின்றேன்...
நீ தூக்கத்தில் உளறிய வார்த்தைளில்
நான் கவிதை யானேனே
இன்று உளற என்னுடன் நீயின்றி
வெறுமையாகின்றேன்....