அழுதிடும் மனிதன்
![](https://eluthu.com/images/loading.gif)
அழுது அழுதுதான்
அவள் பெற்றாள்
அழுதுகொண்டுதான்
மனிதன் பிறந்தான் !
அழுகையின் அவலத்தை
மாற்றி சிரித்திட முயன்றான் மனிதன் !
அதை வாழ்க்கை என்றான் !
அதை தொடரும் வேளையெல்லாம்
இடைவேளையாய் வந்தது அழுகையே !
மீண்டும் முயன்றான் மீண்டும் தொடர்ந்தான் !
மீண்டும் சிரித்தான் மீண்டும் அழுதான் !
முடிவில் வந்து நின்றது
முடிவில்லாத ஒரு மௌனம்
அந்த மௌனத்தின் பொருள்
மகிழ்ச்சியா அழுகையா
யார் அறிவார் ?
அழுதழுதே பிறந்தான்
மரணத்தின் மடியில்
மௌனத் துயிலில்
சிரிப்பும் அழுகையும்
மறந்தே உறங்கினான் !
----கவின் சாரலன்