நிலா+பெண்=நிலாப்பெண் 555

பாவை...
பெண்ணும் நிலவும்
ஒன்றோ...?
நிலவோ வளர்ந்து
தேய்கிறது...
பெண்ணும் வளர்ந்து
தேய்கிறாளோ...?
உதித்து மறையும்
கதிரவனா...?
இல்லை வளர்ந்து
தேயும் நிலவா...?
மலர்போல் மலர்கிறாள்
பிறந்த வீட்டில்...
மலர் செடி போல்
தேய்கிறாள்...
புகுந்த வீட்டில்...
இதுதான் கவிஞர்கள்
சொன்னார்களோ...!
நிலவை போல்
பெண்ணவள் என்று...
நிலா பெண்ணோ அவள்.....