அழகிய விழிகளில் அவள்

நிலவில் அடித்தது
வெயில் - நின்றாள்
கோடையில் அவள்.....!!
கவிதைகள் விளையும்
வயல் - அசைந்தாள்
காற்றின் வடிவில் அவள்...!!
மல்லிகை வாசப்
புயல் - சிரித்தாள்
மதியில் நிறைந்தே அவள்...!!!
அபிநயம் காட்டிய
கயல் - வளர்த்தாள்
அழகிய விழிகளில் அவள்....!!!