குறி 1

மரணத்தின் விளிம்பு தொட்டு
பிறப்பின் கூர் தீட்டுதல்!!....

கரணம் தப்பினாலும்
கரணம் தப்பாவிட்டாலும்
மரணம் மக்களுக்கே - தேர்தல்

சாவகாசமாய் அவகாசம் கேட்கிறது -மழை
தன் பிழைக்காக!!....

தன் பிழைப்பு தேடி
அலைகிறது உழைப்பு!!....

தேனீ கொட்டியது போல இருந்தது
ஓட்டு போட்டு விரலில் இட்ட
கரு(வெறு)மை!!....

எழுதியவர் : வைகை alagarasu (25-Mar-14, 9:51 am)
பார்வை : 71

மேலே