தங்ககொலுசு தாரேன்

அக்கா பெத்த
அழகு பாப்பா
அம்மான் கண்டு
அழுகை ஏனோ ?

புருவம் தூக்கி
உதடு பிதுங்கி
மிரள முழிக்கையில்
வருகிறது சிரிப்பு !

சிங்காரக் கண்ணே
செந்தூரப் பூவே
பட்டாம் பூச்சியே
பப்பாளிப் பழமே !

தோள்மீது சுமப்பேன்
தாலாட்டுப் படிப்பேன்
விரல்பிடித்து நடப்பேன்
பொம்மைவாங்கித் தருவேன் !

பட்டு ரோசாவே
பயம் கொள்ளாதே
தாய்மாமன் நான்
தங்ககொலுசு தாரேன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Mar-14, 9:49 am)
பார்வை : 216

மேலே