பட்டாம்பூச்சி போல
பக்தர்களுக்கு மட்டுமின்றி
காக்கைகளுக்கும் ஒலிக்கும்
கோயில் மணி
எல்லாம் இருந்தும்
பறக்க முடியவில்லை
பட்டாம்பூச்சிபோல
நிலவைப் பாதி
மறைத்து நிற்கிறது
எதிர்வீட்டு நிலா
உடையாமல்
பசியாற்றியிருக்கிறது
யானை உண்ட விளாம்பழம்
மறைவில்
முகம்மறைத்து அழுகின்றது
குயில்

