வெட்ட வெளித் திடல்

வெட்ட வெளித் திடலில் - தனியே
நீயும் நானு மங்கே
சுட்ட கதைக ளெல்லாம் - பேசிக்
களித்திருந்தோம் அழகே !
பட்டப் பகற் பொழுதில் - ஒரு
வெண்ணிலா தோன்றிடுமேல்
வட்ட வடிவங் கொண்ட - உனது
வண்ண முக்கத்தழகே !
வானுக் கிடையி னிலே! - ஒரு
வழிதடம் நான் அமைத்து
தேனுக் கினியவளே - உனைத்
தூக்கிச் சென்றிடவோ ?
ஊனுக் குள்ளே உலகில் - நன்கு
உயிர் வசிப்பதுபோல் !
மானுக் கிளையவளே - உன்னுள்
மண்டி இருந்திடவா ?
விவேக்பாரதி