வாழ்க்கை

வரும் அவசரத்தில்
போக மறுக்கின்றோம்
இருக்கும் காலத்தில்
செய்யாமல் இருக்கின்றோம்

கொடுக்கும் நிலை வந்தும்
பறிக்க துடிக் கின்றோம்
நடக்க முடியாத போது
ஓட துடிக்கின்றோம் !

அடுத்தவனைப் பார்த்தே
நம்மை இழக்கின்றோம்
சுயத்தை இழந்து
சோம்பலில் வாழ்கின்றோம்

வாழ வந்த நாம்
வாழ மறுக்கின்றோம்
வாழ்ந்து மறைந்தவர்களோ
இன்னும் மண்ணில்
வாழ்ந்துக் கொண்டு தான்
இருகின்றனர் .................!

வாழ்க்கை எனபது என்ன ...?
வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களே
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் ...!

அவசரத்தில் வந்தோம்
அவசரமாய் போக மறுக்கின்றோம்
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வாழ்த்த
நாட்களை வகுத்துப் பாருங்கள்
ஈவும் மீதியும் தெரியும் ....!
வாழ்க்கை என்ன எனபது புரியும் ...!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (27-Apr-14, 6:10 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 91

மேலே