அகன் அய்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து

இவர்...
ஓர் இளைஞர்.
சுறுசுறுப்பில் தேனீ..!
மிகையல்ல .!. இவரொரு
வகையான தமிழ் ஞானி.

நாவலர் பள்ளி
தாகூர் கல்லூரி
உருவாக்கிய
வண்டமிழ் தென்றல்.
புதுவையிலிருந்து இந்த
பிரபஞ்சத்தில் வீசும்
செம்மொழி சூறாவளி

மலட்டு மூளைகளை- தன்
அறி வாள்(ல்) முனையில்
கூர்ப்படுத்தி சீர்ப்படுத்திடும்
மந்திர மாயன் இவர்.

இவரிடம் ....

எழுத்துக்களை கொடுத்து
புத்தங்களாக வாங்கலாம்.
மூளையினை கொடுத்து
சிந்தனைகளை வாங்கலாம் -நற்
படைப்புக்களை கொடுத்து
அங்கீகார விருது வாங்கலாம்.

ஆம்
நாம் திறமையாளர்கள்
என்றால்..............!



ஓர் ஆசிரியரை
ஒரு மாணவன்
எவ்வாறு வணங்கினாலும்
தவறாது நன்றியுரைத்தாலும்
நிறையாது மனம்.

ஆசிரியர் பணி
ஏற்றிவிடும் ஏணி
என்று வாழம்
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
திரு.அமிர்தகணேசன்
என்ற
அகன் அவர்களை
வணங்குகிறேன்...!

எழுத்து தள சொந்தங்களுடன்
”பிறந்தநாள் வாழ்த்துகள் !! “
தெரிவித்துக்கொள்கிறேன்.

தோழர் அகன் அவர்கள்.!
எல்லா புகழம் பெற்று
வளத்துடனும் உடல்
நலத்துடனும்
நீடுழி வாழ்ந்திட
தமிழ் அன்னையிடம்
பிராத்திக்கிறேன்.


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (28-Apr-14, 6:43 pm)
பார்வை : 1268

மேலே