நீயேதான்

ஆத்திரம்கொண்டு அன்புதர,
தயங்கி ஒதுங்குகையில்,
நீயேதான் எனை நிர்கதியற்ற,
அனாதை ஆக்குகிறாய் !
கலங்கியும் தயங்கியும்,
புலம்பி வாடுகையில்,
மனதை மடித்தொட்டிலாக்கி,
எங்கேயோ அருவமாயிருந்து,
அதே நீயேதான் !
எனை உலகின் ஆகச்சிறந்த,
சுகவாசி ஆக்குகிறாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-Apr-14, 8:26 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 104

மேலே