நீயேதான்
ஆத்திரம்கொண்டு அன்புதர,
தயங்கி ஒதுங்குகையில்,
நீயேதான் எனை நிர்கதியற்ற,
அனாதை ஆக்குகிறாய் !
கலங்கியும் தயங்கியும்,
புலம்பி வாடுகையில்,
மனதை மடித்தொட்டிலாக்கி,
எங்கேயோ அருவமாயிருந்து,
அதே நீயேதான் !
எனை உலகின் ஆகச்சிறந்த,
சுகவாசி ஆக்குகிறாய் !!