bharathkannan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  bharathkannan
இடம்:  palani
பிறந்த தேதி :  26-Oct-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2011
பார்த்தவர்கள்:  352
புள்ளி:  650

என்னைப் பற்றி...

vaasippai yaasikkira naesahan...........

என் படைப்புகள்
bharathkannan செய்திகள்
bharathkannan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2016 9:22 pm

பழையன புதியன இல்லை,
வளர்த்துக்கொண்ட உறவினில்,
நீ இருக்கிறாய் நிலையாய்,
எனது கவனத்திலும்,
வெறுப்பின் படலத்திலும்,
உலகமெனக்கொண்டாய் ஒரேமுறை,
அன்றிருந்தே உனது சுழலில்,
எனவேதான்,
எல்லாமுமாய் நீ நிஜத்திற்கு !
நிழல் பயன்கள் பெரிதானதல்ல !
தெரிந்தவரை,
எனக்கான நேரம் ஒதுக்குதல் !
குதிரைக்கொம்பு உனக்கு !
நேசித்து வாசித்து பூசித்து,
வசித்து கிழித்துவிட்டாய் என் வரைபடத்தை !
உடைந்தது ஒட்டாது !
என்ற பீங்கான் வாதம்,
பிறை நிலவாவதற்க்கு !
எதிர்மறை வாதங்கள்,
என்ன முடிவு தந்துவிடும்,
நேசித்த நெருப்பு உறவுக்கு !
நீ சொல்ல தீக்குளிக்கும் பிள்ளைதான் !
அதைச்சொல் !
வெறுக்கிற நேரம் !
எட்டாத

மேலும்

புதிய நியதியில் காதலின் சதி காலத்தால் ஆளப்படுகிறது 23-Apr-2016 7:03 am
bharathkannan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2016 9:20 pm

பட்டனவாழ்க்கை மெத்த கசந்து,
போனேன் அதனின் எல்லை கடந்து !
பசைவயல்கள் கண்ணைப்பறிக்க,
பயணப்பட்டேன் மெல்ல நடந்து !
பெருமிதம் என்னுள் பொங்கி எம்பிட,
சாய்ந்து எழுந்தேன் புல்லில் கிடந்து !
பேடைகள்தன்னின் குரலைக்கேட்டு,
நெஞ்சுகுளிர்ந்தேன் விண்ணை அளந்து !
கருமேகங்கள் கவரிகள் வீச,
காற்றில் கலந்தேன் எண்ணம் தொலைந்து !
மலைச்சாரல் பொழியத்துவங்க,
காட்டில் அலைந்தேன் தேகம் களைத்து !
தூரத்தில் ஓர் ஓலைக்குடிசை,
பார்த்து ஓடினேன் கொஞ்சம் மகிழ்ந்து !
உள்நுழைந்து அடைக்கலமாக,
தண்ணீர் புகுந்தது தரையில் தவழ்ந்து !

ஜோடிக்குயில்கள் ஜன்னல்வழியே,
வந்து அமர்ந்தது உச்சி குளிர்ந்து !
அடுத்ததாய் இரு கோழிகள

மேலும்

நல்ல படைப்பு தொடருங்கள் 27-Mar-2016 12:23 am
bharathkannan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2016 9:33 pm

தயங்கிச்துணிந்த பொழுது,
இயல்புதாண்டி இயங்கியது இதயம் !
முயன்றுபார்த்தும்,
முடக்க இயலவில்லை அதன் துடிப்பை !
தொடர்பு எல்லைக்கு வெளியிலிருந்தது மூளை !
இருந்தபோதும் இழந்துகொண்டிருந்தேன் கவனத்தை !
நேர்முகமோ மறைமுகமோ அன்று வெளிப்படையாய் !
தவறுகளில் தடம்புரளும் வாழ்க்கையின் நியதியுடன் !
கற்பூரம் தொட்டு கண்ணிலொற்றி கால்கள் நடுங்கி !
தைரியத்தை தலையிலேற்றி கடவுளின்முகம் பார்த்து !
வரம்வேண்டி மண்டியிட்ட தடதட நொடிகளில் !!

மேலும்

bharathkannan - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2016 10:45 pm

ஜனத்திரள்,
கொடும்வெயில்,
விரட்டும் பணி,
வியர்த்த ஈரத்தில் உடை,
உள்ளுக்கும் தகிக்கும் வேகம்,
காரியம் சாதிக்கிற விவேகம்,
உள்ளத்துடன் போராடும் பொறுமை,
உழைக்கத்தயாராய் தோள்கள்,
அதனைத்தாங்கிடும் தேகம்,
காத்திருப்பில் கணக்கிடும் மூளை,
கனத்தாலும் கலையாத கண்கள்,
கவனமாய் மொழிபேசும் கரங்கள்,
அடுத்தவர்க்கும் சேர்த்தே பகுக்கும் யுக்தி,
தளர்வினை வளர்வாய் ஏற்கிற மனம்,
திட்டமிடலை அகத்தே சுமக்கிற நியதி,
மூர்க்கத்தில் முடக்கப்படாத நிதானம்,
அவசரத்தின் அடிபோகாத சிரத்தை,
முடிவெடுக்கும்வரை தலைதாழ்ந்த சிந்தை,
நடை பரபரத்தாலும் மிடுக்கற்ற தோற்றம்,
கடந்துபோனதும் மறந்துபோகிற உருவம்,
எவரோ ஒருவர் என்ற

மேலும்

bharathkannan - bharathkannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2016 11:11 pm

அன்றில் பறவையின்,
சரியான உதாரணங்கள்,
நீயும் நானுமென,
தாராளமாய் சொல்லலாம்,
அவ்வளவு ஒற்றுமை,
நம்மிடை வளர்ந்த உறவில்,
நீங்கியிருக்க சம்மதமில்லை,
அப்படியான சிந்தனையுமில்லை,
நான் சினப்பட்டாலும்,
நீ ரணப்பட்டாலும்,
சிதறாது தொடர்ந்தது பயணம் !
அதே நாழிகளில்,
உள்ளே நிகழத்துவங்கியிருந்தது !
முளையாய் ஒரு விரிசல் !
கொஞ்சம் கசப்பும் உவர்ப்பும்,
உறைபடத்துவங்கிற்று !
என்ன செய்யலாம் !
சிந்திப்பது சிரமமாயிருந்தது !
ஆயினும்,
ஒருவரை ஒருவர் !
குறைகூறி நிந்திப்பதில்,
ஒரு குறையுமில்லை !
சரி தொடரவேண்டாம் என,
நினைக்கையில் நிந்திப்பில்,
ஒரு பெரும் பிரளயம் !
வார்த்தைகள் தடித்து !
வீசப்பட்டோம்

மேலும்

நெஞ்சார்ந்த நன்றிகள் நட்பே........ 11-Mar-2016 10:04 pm
அழகான நடையில் ஓர் தரமான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Mar-2016 11:41 pm
bharathkannan - bharathkannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2016 10:25 pm

பிஞ்சுத் தொழிலாளர்கள் எங்களது நாட்டினில்,
என்றென்றும் குறையாத நிரந்தரச்சோகங்கள் !
கஞ்சிக்குபோராடும் நெஞ்சத்தில் நாள்தோறும்,
கண்கவர் வண்ணத்தில் சதிராடும் கோலங்கள் !
கன்னத்தில் காய்ந்துபோய் அழுக்காகி தடுமாறும்,
வன்முறை இல்லாமல் வடுவாகும் பாகங்கள் !
தேம்புவோர் தேகத்தை பாங்குடன் சீராட்ட,
பாசமாய் இல்லையே அன்புடை பாலங்கள் !
தலையேறும் பாரங்கள் கால்களை இடறிட,
தள்ளாடி வழிபோக எதனாலே சாபங்கள் !
கண்தூங்கும் நேரத்தில் கைகளில் கீறல்கள்,
கற்பனை எரித்திடும் தீராத பாவங்கள் !
மழலையின் உருவங்கள் உண்மையில் யாதெனில்,
எளிதிலே மறையாத தெய்வத்தின் ரூபங்கள் !
மாற்றுகள் இல்லையே அவர்களை காத்திட,
மாநிலம் எங

மேலும்

நன்றி நட்பே.............. 19-Feb-2016 8:31 pm
அதி அழகு பதிப்பு !! கட்டமைப்பினில் கவனம் காட்டவும் !! 15-Feb-2016 11:56 pm
bharathkannan - bharathkannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2016 9:10 pm

எனை ஆளும் சிவனே இவளது தாரகமந்திரம் உந்தன் பெயரே,
நினைவான கனவே உந்தன் நிழலை நோக்கும் எந்தன் துயரே,
உனைக்கானா நிமிடமனைத்தும் ஆகிப்போவேன் வாடிய பயிரே,
உணர்வுக்கென உருவம் தரித்து உலவவந்தவன் நீதான் உயிரே !

புதிதாக என் உலகுக்குள் வந்தமர்ந்தது உந்தன் உறவே,
தரிசாகத் தொடர்ந்த வாழ்வில் தூவப்பட்டது உன்னத உரமே,
எனையாண்ட தனிமையெல்லாம் உன்னைக்கண்டதும் போனது துறவே,
கால் தொடங்கி மேனி படர்ந்து காதல் கிளர்ந்து சோர்ந்தது சிரமே !

நீ புதைந்த நெஞ்சின் ஆழம் நிறைந்து ஆனது கண்ணீர்க் குளமே,
தீ வளர்ந்து தீண்டி நனைக்குது தேகம் வாடுது எந்தன் வரமே,
நா சுரந்த வார்த்தை எல்லாம் நர்த்தனமாடுது நாளும் வளமே,
போர்க

மேலும்

நன்றிகள் நட்பே !! 02-Feb-2016 10:53 pm
கவிதையின் சொல்லாடலும் கட்டமைப்பும் மிக அழகு அதை விட காதல் வரிகள் பேரழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jan-2016 11:53 pm
bharathkannan - bharathkannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 8:22 pm

வெறுப்பதில் முதல் இடம்,
நெருப்பாய் சுடுபவள்,
எல்லைகள் வகுத்துக்கொண்டு,
என்னை விரட்டியவள்,
ஊஞ்சலாடிக்கொண்டிருந்த தனியனை,
இனியனாக்கி பின்,
ஊசலாட வைத்தவள்,
பிடிவாதம் அவள் பெரும்சொத்து,
தலைக்கனம் அவள் நிலைத்த கிரீடம்,
ஆணவம் நாவின் அடிநாதம்,
அகங்காரம் அவ்வப்போது தலைகாட்டும்,
தூரத்து உறவினன்.............
என்றாலும்,
அவள் பாசம் காட்டினால்,
"சோ"வென்று பெய்யும் பெருமழை !
பாசம்வைத்தால் அதன்போக்கில்,
அடித்துச்செல்லும் காட்டாறு !
நிழலுக்கு அண்டினால்,
நிறைந்த காற்றையும் தந்து,
கவரிவீசும் பெருந்தகை !
தன்மையில் இரண்டறக்கலந்தவள்,
உண்மையின் தராசில் சற்றே உயர்ந்தவள் !
நிஜம் நீட்டிக்கப்படுகை

மேலும்

மிக்க நன்றி நண்பரே........ 15-Jan-2016 9:11 pm
காதலுக்குள் அழகாய் வாழ்ந்து கொண்டிருப்பது போல் கவி பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 11:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

ராம்

ராம்

காரைக்குடி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (36)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
mohd farook

mohd farook

colachel, kanyakumari dist.

இவரை பின்தொடர்பவர்கள் (36)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே