நானும் பட்டாசு தொழிற்சாலையும்

சைக்கிள் மணியடித்து
குடும்பத்திடம் விடை பெற
தலைவன் முனைகயிலே

துள்ளி குதித்து
வாசலுக்கு வந்தது வாண்டு ஒன்று
அப்பா என்றபடி

நானும் வருவேன்
நானும் வருவேன்
அப்பா நானுப்பா என்றது ஆசையோடு

நாளைக்கு தம்பி என்றதும்
வாடியது குழந்தை முகம்

அந்நேரம் அங்கு
தலைவியும் வந்து நிற்க
வாண்டு முகம் பார்த்து

அப்பா இன்று போய் வரட்டும் தம்பி
நாளை நிச்சயம்
உன்னை அழைத்து செல்வார் என்றாள்
குழந்தையை தூக்கி இடுப்பில் இருத்தியவாறு

ஒரு விதமாக இளவரசன் விடையளிக்க
சிறு புன்னகையோடு
அப்பா உந்தினர் சைக்கிளை
வழக்கம் போல பட்டாசு தொழிற்சாலைக்கு

நேரம் போனது
தாயும் பிள்ளையும் ஆலயம் சென்ற போது
மனமுருகி வேண்டினாள்
தலைவி அம்மனிடம்
தான் தீர்க்க சுமங்கலியாக திகழ்ந்திட

அம்பாளுக்கு என்ன
அவள் என்றும் போல
அலங்காரத்தோடு காட்சி தந்தாள்

வீடு திரும்பிய தலைவி
சமைக்க தொடங்கிய போது
தொலைகாட்சி பெட்டிக்கு உயிர் கொடுத்தான்
வாண்டு இயக்கி வழியாக

முக்கிய செய்தி - இன்று காலை
பதினோறு மணிக்கு
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து
முப்பதுக்கும் மேற்பட்டோர்
உடல் கருகி சாவு

பலர் உயிருக்கு போராடிய நிலையில்
மருத்துவமனையில் சேர்ப்பு என்றார்
செய்தி வாசிப்பாளர்

கதறி ஓடினால் கணவனை தேடி
இரண்டு நாள் கழிந்த பின் கிடைத்தது
கணவனின் உயிர் சுமந்த கூடு

கருகிய உடலை
விறகுக்குள் புகுத்தினர் சம்ப்ரதாய
சடங்குகள் என்னும் பெயரால்

விடிந்ததும்
அப்பா கூட நான் இன்றைக்கு
சைக்கிள போவேன் என்று
அடம் பிடித்து

அப்பா எங்கே என்று
தேடும் சிறுவனுக்கு
கண்ணீரோடு முத்தமிட்டு
அவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
தானும் செல்கிறாள்
பட்டாசு தொழிற்சாலைக்கு

தன் பிள்ளை
பசி அறியாமல் இருக்க

எழுதியவர் : Meenakshikannan (16-May-14, 2:11 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 81

மேலே