பனி துளிகள்

விடியலில் பூத்தது வெள்ளி
புல்வெளியில் போர்த்திய மல்லி
கதிரவன் கண் பட்டு
முடிந்தது வாழ்க்கை
வருடிய ஈரம் மனதில்
நினைவு சுமக்குது பாரம்
நாளைய இரவினை எண்ணி
இன்றைய விடியலின் கோபம்
என் மனம் தனியே தவிக்குது !

எழுதியவர் : நீலமேகம் (7-Jun-14, 6:44 pm)
Tanglish : pani thulikal
பார்வை : 208

மேலே