ஓர் கயிற்றின் குமுறல்
குழந்தை பிறந்ததும் திருஷ்டி நீங்கிட,
இடுப்பில் நான் ஒரு அரைஞாண் கயிறு,
தாயின் மடியைப் போல் தூங்க நீ ஆட்டிட,
நான் அப்போது தூளிக் கயிறு,
பிரம்மோபதேசம் என்ற பெயரில்,
உடலில் நான் பூணூல் கயிறு,
வளந்த வாலிபன் மணத்தின் முன்பு,
கையதில் கட்டும் நேசக் கயிறு,
திருமணத்தில் மணமகள் கழுத்தில்,
நான் மஞ்சள் நிறத்தில் தாலிக் கயிறு,
இறந்த போதும் சடலங்கட்ட,
நான் ஒரு பாடைக் கயிறு,
உழவன் பூட்டும் மாட்டதன் கழுத்தில்,
கட்டிட நானும் ஜல்லிக் கயிறு,
ஆழ் கிணற்றின் நீரதை சுமந்து,
தாகம் தணிக்கும் தாம்புக் கயிறு,
வாழ்க்கையின் ஒவ்வோர் படியதை தாண்டிட,
உதவும் நானும் நல்லோர் கயிறு;
ஆனால் இன்றோ அவலம் எனது,
கற்பழித்து இளம் சிறுமியர் உயிர்களை,
தூக்கிலிட்டு மரங்களில் பறிக்க உதவும்,
நானும் நல்லொருக் கயிறோ இன்று?
மாண்டு ஊஞ்சலாடும் சடலங்களின் உயிரது,
துடித்து, வெட்கித்து, பறந்தது சென்றிட,
உயிரது எனதோ பிறிய மறுக்கிரதே!