sampath kolkata - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sampath kolkata
இடம்:  KOLKATA
பிறந்த தேதி :  01-Apr-1952
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Apr-2011
பார்த்தவர்கள்:  320
புள்ளி:  125

என்னைப் பற்றி...

Third generation Tamil in Kolkata

என் படைப்புகள்
sampath kolkata செய்திகள்
sampath kolkata - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2024 11:33 am

புகைசூழ்ந்த சிறிய அறை

பொறுக்கி வந்த ஈர விறகுகள்
இரக்கம் காட்ட மறுக்கின்றன,
பகைசூழ்ந்த சிறிய இருட்டு அறை
தாயவள் கண்ணீரை மூடி மறைக்கிரது;

மற்றவர் அணுகாத மண்ணுக்கடியில்
காலைக் கடன்கள் கழித்த இடத்தில்
தோண்டியெடுத்த மரவள்ளிக் கிழங்குகள்
பிடிவாதத்துடன் வேக மறுக்கின்றன;

பலமுறை சுத்தம் செய்தும்
போகாத மல வாடையை கல்லான மனம்
பொறுத்து கொண்டு விட்டது
இதை விட்டால் வேறு உணவில்லை;

உணற்ச்சியற்று குடிபோதையில்
உறங்குகிறான் கட்டியவன்,
உயிரிருப்பதை அவ்வப்போது இருமி
நினைவூட்டுகிறான்;

எழுந்துவிட்டால் அடி உதை பெண்ணவளுக்கு
மனைவியென்ற காரணமொன்றே போதுமே
வதங்கி கிடக்கும் மழலைகளுக்காக
பொறுத

மேலும்

sampath kolkata - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2024 5:48 pm

பொங்கலோ பொங்கல்!

ஏங்கித் தவிக்கும் எண்ணங்கள்
பூப்பெய்தியப் புதுப் பெண்ணைப்போல்
வெட்கித்தலை குனியாமல்
கள்குடித்தக் களிறுபோல்
பிளிறி பிளந்தெழுந்து
உத்வேகத்துடன் உந்தி வருகிறது;

மஞ்சள் பூசி பாலில் குளித்து
புதுமணப்பெண்போல் பூச்செண்டணிந்து
மங்கள நாதமுழங்க பூரித்து பொங்கியெழுந்து
குதூகலுத்துடன் யாவரும்
ஆரவாரத்துடன் முழங்க
பொங்கி விட்டது பொங்கலோ பொங்கல்!

சம்பத் குமார், கல்கத்தா

மேலும்

sampath kolkata - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2023 5:54 pm

எக்காளமிட்டு எமனுடன் குலவி
துன்பங்களை மறந்திடுவாயென
ஏழை தொழிலாளர்களை ஊக்குவித்து
கள்ளச்சாரயமெனும் விஷத்தைக்
கொடுத்து,
உயிர்களைப் பறித்து
பதிலுக்கு இதோ தந்திட்டோம்
பத்து லட்சம் இழப்பீடென
பெருமையுடன் பறைசாற்றிக்கொள்ளும்
அரசே வாழி.

சம்பத் குமார்

மேலும்

sampath kolkata - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2023 9:24 am

ஏழ்மை ஒழிக!

தங்கத் தட்டில்
வயிறார உண்டு
இலவம் பஞ்சு திணித்த
சொகுசு மெத்தையில்
உறங்கும் பணப் பெருச்சாளிகள்
பொழுது போக்காக
வெயில் தாழ்ந்தவுடன்
செய்தி நிருபர்கள்
புகைப்படக்காரர் புடைசூழ
வெளியில் ஒருங்கிணைந்து
எழுப்புகின்றனர் கோஷம்
"தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்"
புகைப்படம் எடுத்தாகிவிட்டது
புறப்பட்டு விட்டனர்
மீண்டும் உணவு வேட்டைக்கு.
ஏழ்மை ஒழிக,
எழுபது ஆண்டுகளாக!

சம்பத் குமார்

மேலும்

sampath kolkata - sampath kolkata அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2021 11:59 am

மச்சான் கட்டிகிட்டான்!

மச்சானெ மரத்துப் பின்னாடி
ஒளிஞ்சுகிட்டு பாக்குறேன் நான்
ஆளுல்லாத நேரத்துல
இடுப்பு துணிய கழட்டிப் போட்டு
வீட்டு காளை தோத்தது போல
விரைச்ச மாரைக் காட்டிக்கிட்டு
பொறந்த புள்ள போல உடுப்பில்லாம
கொளத்து தண்ணியில
கால மொள்ள நனைச்சுக்கிட்டு
திமிங்கலம் போல ஆழத்துல
நிமிசத்துல அமுந்துப்புட்டான்;

அஞ்செட்டு நிமிசமாச்சு
ஆள காணவில்ல
பக்குன்னுது ஏம்மனசு
அடிவயறு கலக்குறது
கரையாண்ட வந்து நானும்
அசவில்லாத தண்ணிய
பாக்குறேன் ஏக்கத்தோடு
ஏன்கண்ணே பட்டுடுத்தோ
மாரியாத்தா மன்னிச்சுடு
மலைக்கு நானும் வந்து
புரண்டு கும்பிடறேன்;

பின்னால சலசலப்பு
ஏன் மச்சான் சிரிச்சிகி

மேலும்

sampath kolkata - sampath kolkata அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2020 11:24 am

எஸ்.பி.பி

ஓடும் மேகங்களில் ஓசையை
எப்படிக் கண்டாயோ?
பொழியும் மழைதனைக் குலவி
இசையும் அமைத்தாயோ?

மண்ணிலிருந்து வெளிவரும் துளிர்களின்
மெல்லியச் சப்தத்தையும்
துல்லியமாக உணர்ந்து
பாடாலாக அமைத்தாயோ?

காண இயலாத கடவுளையும்
கானம் உனது மூலம்
கண்ணீர் மல்கி
அழைத்தணைத்தாயோ?

பாடத் தெறிந்தது பெண்குயிலுக்கு மட்டுமே
என நான் நினைத்திருக்கையிலே
உன்னிசையை உலகிற்கே உணர்த்திவிட்டாய்
இசைக்கு புது மெருகூட்டிவிட்டாய்


மண்ணிலே பிறந்து
மண்ணிலே மறைந்தாலும்
விண்ணளவு உனது சங்கீதம்
என்னுள் என்றும் நிலைத்திருக்கும்!

சம்பத் குமார்

மேலும்

sampath kolkata - sampath kolkata அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2015 3:48 pm

இயற்கையின் சீற்றம்!

பனிப்பாளங்கள் உடைந்து
கடலில் கலந்து உருகி கரைய,
கடலோட்டங்கள் பாதிக்கப்பட்டு,
வெட்ப, தட்ப நிலைகள் மாற,
மழை பொழியா நிலங்கள் வெடித்து,
பயிர்கள் எரிந்து, உழவர்கள் மடிய,
கடும் புயல்கள், வேக வெள்ளங்களென,
இயற்கை சினம் கொண்டு,
சீற்ற்முடன் பரைந்துரைத்தாலும்,
அறவே அவற்றை புறக்கணித்து நாமும்,
அழியும் பாதையில் மேலும் விரைகிறோம்;

நில எண்ணெய், கரி போன்ற,
புவியளித்த பொக்கிஷங்களை,
பேராசையுடன் தோண்டியெரித்து,
உலகைக் காக்க இயற்கை அளித்த,
‘ஓஜோன்’ எனும் கேடயத்தை தகர்த்து,
உலகமே அவதியுரும் நிலைக்கு வந்தும்,
சீரமைக்கும் முயற்சியில் துரிதம் காட்டாமல்,
மனித குலத்திர்க்கு குழ

மேலும்

உங்கள் அறிவுரைக்கு நன்றி! ஒஜோன் அகராதியிலிருந்து எடுத்ததாகும். எனினும் தவறாக இருந்தால் மாற்றிவிடுகிறேன். வணக்கம் 11-Aug-2015 7:47 am
நல்ல சிந்தனை தோழரே... ஓஜோன் என்பதை ஓசோன் என்று கூட சொல்லலாம் புரியும் வகையில்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 1:19 am
sampath kolkata - sampath kolkata அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 2:00 pm

பெண்ணே எழுந்திரு!

எழுந்திரடி பெண்ணே எழுந்திரு,
உயிறற்ற ஜடம் போல
உலவிக்கொண்டிருக்கும் பெண்ணே,
உடனே எழுந்திரு!

உள்ளம் ஒன்று உனக்கும் உண்டு,
என்பததையரியாமல் உனது பெற்றோரும்
செல்வத்துடன் உனையும் சேர்த்து,
அன்னியனொருவனுக்கு உரிமையாக்கினரே!

உடலையே மட்டும் நோக்கி,
தன்னிச்சை பூர்த்தி செய்து,
தனக்கொரு மகன் தரும்வரை,
மகப்பேறு எனும் சுழலில் சுழற்றி அடித்தனறே!

பகலில் பற்று கொள்ளாமல்,
இரவில் மட்டும் மோகம்கொண்டு,
அண்டிடும் அறற்றலதில் விடுபட்டு,
எழுந்துவிடு பெண்ணே, எழுந்து விடு;

ராணி லட்சுமிபாய் போன்ற வீராங்கனைகளை,
உவமைக்காட்டி பேசி, வீடு திரும்பி உனை,
வேசிபோல் நடத்தும் மிருகங்கள

மேலும்

பெண்களின் எழுச்சியை தூண்டும் கவிதை 20-Aug-2015 3:26 pm
மிக்க நன்றி நண்பரே! 10-Aug-2015 3:52 pm
மிக்க நன்றி நண்பரே! 10-Aug-2015 3:52 pm
மிக்க நன்றி 10-Aug-2015 3:51 pm
sampath kolkata - sampath kolkata அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 7:12 pm

உனைத் தேடி வீண் அலைகிறேன்,
உண்மையைத் தேடி நான் அலைகிறேன்,
தெருத்தெருவாக தெரியாமலே திசையற்று,
உன் உருவைத் தேடி அலைகிறேன்;

நீ குடியிருக்கும் கோவிலில்,
மணிக்கணக்காக வரிசையில் நின்று,
உன் ஓர் உருவத்தின் ஊடே
உள்ளுருவம் காண முன் நான் விழைகிறேன்;

காண உனை ஓர் சிறப்புக் கட்டணமாம்,
இல்லையேல் பல நாட்கள் தாமதமாம்,
காவலரின் கையழுத்தினால் மட்டுமே,
உனை கணப்பொழுதினிலே காணக்கூடுமாம்;

வெற்றுடம்பில் சந்தனமிட்டு, மாலையணிந்து,
பெரும் ஒலியெழுப்பி கீதங்கள் பலர் உன்பால் பாட,
பாட்டறிவற்ற என்போன்ற மனிதர்களை,
என்றுமே நீயும் விலக்கியே வைப்பாயோ?

விவரமரியா மொழிதனிலே,
இசை பாடுகிறேனா அல்லது வசைபாடுகி

மேலும்

மிக்க நன்றி சகோதரியே! 21-Dec-2014 1:54 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! 21-Dec-2014 1:54 pm
மிக்க நன்றி நண்பரே! 21-Dec-2014 1:52 pm
அருமை ! நல்ல கருத்துக்கள் ! அதுவும் கவிதையின் கடைசி எட்டு வரிகள் உண்மையாக "பய"பக்தி கொண்ட சராசரி மனிதனின் ஆதங்கங்களை கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றது ! பாராட்டுக்கள் நண்பரே ! 21-Dec-2014 12:08 pm
sampath kolkata - sampath kolkata அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 8:32 pm

இத்தொலைத் தூரமா என் புதிய இல்லம்?
ஐயோ பாவம்,
என் கண்ணின் மணி போன்ற மைந்தன்,
சிரமம் சிறிதும் பாராமல்,
முகம் சிறிதும் கோணாமல்,
கைக் குடுத்து ஆட்டோவிலிருந்து கீழிறக்கி,
தன் தோளிலேயே எனைத் தூக்கி,
சொகுசாக அமர வைத்து,
முதியோர் இல்லத்திலிருந்து,
தலை திருப்பாமலே,
திரும்பிச் செல்கிறானே,
பாவி எனது பாரமதை,
தூக்கியபின் கழுத்தவனது,
சுளுக்கிக் கொண்டதோ?
அவன் வேதனையை நினத்து,
மழுங்கிய என் பார்வை,
பனித்து நனைகிறதே!

மேலும்

நாகூர் கவி மற்றும் ஜின்னா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. 04-Sep-2014 8:45 pm
அருமை நட்பே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... 04-Sep-2014 2:27 pm
சிறப்பு 04-Sep-2014 8:59 am
மேலும்...
கருத்துகள்

மேலே