sampath kolkata - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : sampath kolkata |
இடம் | : KOLKATA |
பிறந்த தேதி | : 01-Apr-1952 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 328 |
புள்ளி | : 127 |
Third generation Tamil in Kolkata
பறவை நான் பறப்பேனா?
பூமி பரந்தது,
வானம் எல்லையற்றது,
பலர்—ஆண்கள், பெண்கள், குழந்தைகள்—
நோய்வாய்ப்பட்டவர்களும் ஆரோக்கியமானவர்களும், நடப்பவர்களும் ஓடுபவர்களும்,
போர் வீரர்களும் கபட அரசியல்வாதிகளும்—
இந்த உலகை நிரப்புகின்றனர்.
இந்த கூச்சலும் குழப்பமும்,
இந்த கூட்டமும் இரைச்சலும் இருந்தும்,
நான் தனிமையாக உணர்கிறேன், தள்ளப்பட்டவனாக,
கடும் அலைகளின் மேல்
திசைதெரியாத படகு போல அலைந்து திரிகிறேன்
அல்லது கூண்டில் அடைபட்ட பறவை போல, தத்துவ ஞானியாக,
அதன் வாழ்க்கை முடியும் என அறிந்தும்,
அதன் உரிமையாளர் கொடுக்கும் சிறிது உணவை உண்கிறது,
அல்லது மறந்துவிட்டால் பட்டினி கிடக்கிறது.
மனதளவில், அத
ரவீந்திரரின் சாந்திநிகேதன்
அவரது ஆன்மா அலைகிறது
அமைதியற்று கவலையுடன்,
அப்புலவர் நினைவுகூறுகிறார்
திரும்பி வரமுடியாத அந்த
அழகிய நாட்களை நினைத்து
சாந்திநிகேதனின் நிலங்குளடன்
காதல் கொண்டு
அச்செந்தூரப்பூக்கள்
உடலுறவுகொண்டு அவ்வளமுற்ற மண்ணினை
சிவப்பாக மாற்றி விட்டனவே
காதம்பரியின் சலங்கை ஒலியில்
கொபாய் நதியின் வற்றிய படுகைகள்
காமத்தில் விறைத்தெழுந்து
அளவில்லா நீரூற்றுகளை பீச்சியடிக்க
மீன்கள் கும்மாளத்துடன் நடனமாடுகின்றனவே
வசந்த்தத்தின் அவ்வழகிய நிறங்களுடன்
எளிய முறையில் பேசி
கவிதைகள் வாசித்து
முடிவற்ற நேசத்துடன் சிரித்து மகிழ்ந்து
வாழ்க்கைத் தரம் உயர்ந்தனவே
நிலம் இன்று
புகைசூழ்ந்த சிறிய அறை
பொறுக்கி வந்த ஈர விறகுகள்
இரக்கம் காட்ட மறுக்கின்றன,
பகைசூழ்ந்த சிறிய இருட்டு அறை
தாயவள் கண்ணீரை மூடி மறைக்கிரது;
மற்றவர் அணுகாத மண்ணுக்கடியில்
காலைக் கடன்கள் கழித்த இடத்தில்
தோண்டியெடுத்த மரவள்ளிக் கிழங்குகள்
பிடிவாதத்துடன் வேக மறுக்கின்றன;
பலமுறை சுத்தம் செய்தும்
போகாத மல வாடையை கல்லான மனம்
பொறுத்து கொண்டு விட்டது
இதை விட்டால் வேறு உணவில்லை;
உணற்ச்சியற்று குடிபோதையில்
உறங்குகிறான் கட்டியவன்,
உயிரிருப்பதை அவ்வப்போது இருமி
நினைவூட்டுகிறான்;
எழுந்துவிட்டால் அடி உதை பெண்ணவளுக்கு
மனைவியென்ற காரணமொன்றே போதுமே
வதங்கி கிடக்கும் மழலைகளுக்காக
பொறுத
பொங்கலோ பொங்கல்!
ஏங்கித் தவிக்கும் எண்ணங்கள்
பூப்பெய்தியப் புதுப் பெண்ணைப்போல்
வெட்கித்தலை குனியாமல்
கள்குடித்தக் களிறுபோல்
பிளிறி பிளந்தெழுந்து
உத்வேகத்துடன் உந்தி வருகிறது;
மஞ்சள் பூசி பாலில் குளித்து
புதுமணப்பெண்போல் பூச்செண்டணிந்து
மங்கள நாதமுழங்க பூரித்து பொங்கியெழுந்து
குதூகலுத்துடன் யாவரும்
ஆரவாரத்துடன் முழங்க
பொங்கி விட்டது பொங்கலோ பொங்கல்!
சம்பத் குமார், கல்கத்தா
எக்காளமிட்டு எமனுடன் குலவி
துன்பங்களை மறந்திடுவாயென
ஏழை தொழிலாளர்களை ஊக்குவித்து
கள்ளச்சாரயமெனும் விஷத்தைக்
கொடுத்து,
உயிர்களைப் பறித்து
பதிலுக்கு இதோ தந்திட்டோம்
பத்து லட்சம் இழப்பீடென
பெருமையுடன் பறைசாற்றிக்கொள்ளும்
அரசே வாழி.
சம்பத் குமார்
ரவீந்திரரின் சாந்திநிகேதன்
அவரது ஆன்மா அலைகிறது
அமைதியற்று கவலையுடன்,
அப்புலவர் நினைவுகூறுகிறார்
திரும்பி வரமுடியாத அந்த
அழகிய நாட்களை நினைத்து
சாந்திநிகேதனின் நிலங்குளடன்
காதல் கொண்டு
அச்செந்தூரப்பூக்கள்
உடலுறவுகொண்டு அவ்வளமுற்ற மண்ணினை
சிவப்பாக மாற்றி விட்டனவே
காதம்பரியின் சலங்கை ஒலியில்
கொபாய் நதியின் வற்றிய படுகைகள்
காமத்தில் விறைத்தெழுந்து
அளவில்லா நீரூற்றுகளை பீச்சியடிக்க
மீன்கள் கும்மாளத்துடன் நடனமாடுகின்றனவே
வசந்த்தத்தின் அவ்வழகிய நிறங்களுடன்
எளிய முறையில் பேசி
கவிதைகள் வாசித்து
முடிவற்ற நேசத்துடன் சிரித்து மகிழ்ந்து
வாழ்க்கைத் தரம் உயர்ந்தனவே
நிலம் இன்று
புகைசூழ்ந்த சிறிய அறை
பொறுக்கி வந்த ஈர விறகுகள்
இரக்கம் காட்ட மறுக்கின்றன,
பகைசூழ்ந்த சிறிய இருட்டு அறை
தாயவள் கண்ணீரை மூடி மறைக்கிரது;
மற்றவர் அணுகாத மண்ணுக்கடியில்
காலைக் கடன்கள் கழித்த இடத்தில்
தோண்டியெடுத்த மரவள்ளிக் கிழங்குகள்
பிடிவாதத்துடன் வேக மறுக்கின்றன;
பலமுறை சுத்தம் செய்தும்
போகாத மல வாடையை கல்லான மனம்
பொறுத்து கொண்டு விட்டது
இதை விட்டால் வேறு உணவில்லை;
உணற்ச்சியற்று குடிபோதையில்
உறங்குகிறான் கட்டியவன்,
உயிரிருப்பதை அவ்வப்போது இருமி
நினைவூட்டுகிறான்;
எழுந்துவிட்டால் அடி உதை பெண்ணவளுக்கு
மனைவியென்ற காரணமொன்றே போதுமே
வதங்கி கிடக்கும் மழலைகளுக்காக
பொறுத
பொங்கலோ பொங்கல்!
ஏங்கித் தவிக்கும் எண்ணங்கள்
பூப்பெய்தியப் புதுப் பெண்ணைப்போல்
வெட்கித்தலை குனியாமல்
கள்குடித்தக் களிறுபோல்
பிளிறி பிளந்தெழுந்து
உத்வேகத்துடன் உந்தி வருகிறது;
மஞ்சள் பூசி பாலில் குளித்து
புதுமணப்பெண்போல் பூச்செண்டணிந்து
மங்கள நாதமுழங்க பூரித்து பொங்கியெழுந்து
குதூகலுத்துடன் யாவரும்
ஆரவாரத்துடன் முழங்க
பொங்கி விட்டது பொங்கலோ பொங்கல்!
சம்பத் குமார், கல்கத்தா
இயற்கையின் சீற்றம்!
பனிப்பாளங்கள் உடைந்து
கடலில் கலந்து உருகி கரைய,
கடலோட்டங்கள் பாதிக்கப்பட்டு,
வெட்ப, தட்ப நிலைகள் மாற,
மழை பொழியா நிலங்கள் வெடித்து,
பயிர்கள் எரிந்து, உழவர்கள் மடிய,
கடும் புயல்கள், வேக வெள்ளங்களென,
இயற்கை சினம் கொண்டு,
சீற்ற்முடன் பரைந்துரைத்தாலும்,
அறவே அவற்றை புறக்கணித்து நாமும்,
அழியும் பாதையில் மேலும் விரைகிறோம்;
நில எண்ணெய், கரி போன்ற,
புவியளித்த பொக்கிஷங்களை,
பேராசையுடன் தோண்டியெரித்து,
உலகைக் காக்க இயற்கை அளித்த,
‘ஓஜோன்’ எனும் கேடயத்தை தகர்த்து,
உலகமே அவதியுரும் நிலைக்கு வந்தும்,
சீரமைக்கும் முயற்சியில் துரிதம் காட்டாமல்,
மனித குலத்திர்க்கு குழ
பெண்ணே எழுந்திரு!
எழுந்திரடி பெண்ணே எழுந்திரு,
உயிறற்ற ஜடம் போல
உலவிக்கொண்டிருக்கும் பெண்ணே,
உடனே எழுந்திரு!
உள்ளம் ஒன்று உனக்கும் உண்டு,
என்பததையரியாமல் உனது பெற்றோரும்
செல்வத்துடன் உனையும் சேர்த்து,
அன்னியனொருவனுக்கு உரிமையாக்கினரே!
உடலையே மட்டும் நோக்கி,
தன்னிச்சை பூர்த்தி செய்து,
தனக்கொரு மகன் தரும்வரை,
மகப்பேறு எனும் சுழலில் சுழற்றி அடித்தனறே!
பகலில் பற்று கொள்ளாமல்,
இரவில் மட்டும் மோகம்கொண்டு,
அண்டிடும் அறற்றலதில் விடுபட்டு,
எழுந்துவிடு பெண்ணே, எழுந்து விடு;
ராணி லட்சுமிபாய் போன்ற வீராங்கனைகளை,
உவமைக்காட்டி பேசி, வீடு திரும்பி உனை,
வேசிபோல் நடத்தும் மிருகங்கள
உனைத் தேடி வீண் அலைகிறேன்,
உண்மையைத் தேடி நான் அலைகிறேன்,
தெருத்தெருவாக தெரியாமலே திசையற்று,
உன் உருவைத் தேடி அலைகிறேன்;
நீ குடியிருக்கும் கோவிலில்,
மணிக்கணக்காக வரிசையில் நின்று,
உன் ஓர் உருவத்தின் ஊடே
உள்ளுருவம் காண முன் நான் விழைகிறேன்;
காண உனை ஓர் சிறப்புக் கட்டணமாம்,
இல்லையேல் பல நாட்கள் தாமதமாம்,
காவலரின் கையழுத்தினால் மட்டுமே,
உனை கணப்பொழுதினிலே காணக்கூடுமாம்;
வெற்றுடம்பில் சந்தனமிட்டு, மாலையணிந்து,
பெரும் ஒலியெழுப்பி கீதங்கள் பலர் உன்பால் பாட,
பாட்டறிவற்ற என்போன்ற மனிதர்களை,
என்றுமே நீயும் விலக்கியே வைப்பாயோ?
விவரமரியா மொழிதனிலே,
இசை பாடுகிறேனா அல்லது வசைபாடுகி
இத்தொலைத் தூரமா என் புதிய இல்லம்?
ஐயோ பாவம்,
என் கண்ணின் மணி போன்ற மைந்தன்,
சிரமம் சிறிதும் பாராமல்,
முகம் சிறிதும் கோணாமல்,
கைக் குடுத்து ஆட்டோவிலிருந்து கீழிறக்கி,
தன் தோளிலேயே எனைத் தூக்கி,
சொகுசாக அமர வைத்து,
முதியோர் இல்லத்திலிருந்து,
தலை திருப்பாமலே,
திரும்பிச் செல்கிறானே,
பாவி எனது பாரமதை,
தூக்கியபின் கழுத்தவனது,
சுளுக்கிக் கொண்டதோ?
அவன் வேதனையை நினத்து,
மழுங்கிய என் பார்வை,
பனித்து நனைகிறதே!