திருந்தட்டும் ~ ஹிமாத்ரி

காஞ்சிப் பட்டு காணவில்லை
காலம் செய்த சூட்சமென்ன?
மங்கையின் மார்பில் மயக்கமென்ன?
மதி இழந்தோர் செய்வதில் சரியென்ன?

துப்பட்டாக்கள் சேலையானதோ
நூலில் பட்றாக்குறையா?
நூல்விடுவதில்(பேசுவது)
பிரச்சனையா?

தொழில்நுட்பம் வளர்வதில்
முக்கியத்துவம்
எவர் அறிவார்?
அது வளர்ந்ததில்
வளரும் பிழைகள்
அனைவரும் அறிவர்...

கல்லூரிக்கு செல்வது பொழுதுபோக்கானது
போக்குகள் போதையில் சென்றது...
அனுபவம் அறிவது
ஆனந்தமானது -அதனால்
தவறுகள் செய்வதும் சரியானது..

மரியாதை சொன்னவர்களுக்கு
மறியலே மிச்சம்..
சுவடுகள் பதிந்ததெல்லாம் வரலாறானால்
இந்த காலமும் வரலாறு தான்
மிகவும் மோசமான வரலாறு
எழுதிக்கொள்ளுங்கள்
வருபவர்களாவது திருந்தட்டும்,
நாட்டினை திருத்தட்டும்..

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (23-Jun-14, 8:18 pm)
பார்வை : 71

மேலே