முதியோர் இல்லம்

உறவுகள் அற்ற அனாதைகளாக
நாங்கள் ஒதுங்கி இருக்கின்றோம்
படைத்த இறைவன் மட்டும் ஏனோ
எங்களை இன்னும் கைவிடவில்லை

பெயர் சொல்லி கூப்பிட
யாருமில்லா மலட்டு கும்பலல்ல
நாங்கள்
ஒன்றுக்கு இரண்டல்ல பலதை
ஈன்றெடுத்து அப்பாவிகள்

தள்ளாடும் வயதில்
தனிமரமாய் இங்கு .....

மூன்று நேர சாப்பாடு
மூத்தவனுக்கு காரு
இளைவயனுக்கு பைக்கு
என்று உள்ளதை கொடுத்தோம்
எங்களையே நாங்கள் உருக்கி கொடுத்தோம்

ஆளில்லா காட்டுக்குள்
ஒற்றை மரமாய் எங்கள் வாழ்கை
இன்னும் ஏனோ இந்த
நாலு சுவருக்குள் .....

பிள்ளைகளின் பாசம் வேண்டி
பரிதவிக்கும் தாய் ஜாதி நாங்கள்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (29-Jun-14, 12:06 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 360

மேலே