விதியா சதியா
சுமைகளுடன் பறந்தபோது
விழாத பறவை
சூன்யகாரர்கள் பார்வை பட்டதில் வீழ்ந்தது...
சூரியன் சுட்டபோது கூட எரியாத உடல்
அசூரர்கள் சுட்டதில் வீழ்ந்தது...!!
எரிந்தது நிஜமாய் மரத்தின் நிழலில்
எரியும் உயிர்மெய்யை அணைப்பதற்கு
கைகள் இல்லாமல்
இதுவரை எல்லையில்லாமல் பறந்த
பறவைகளுக்கும் பயம்தான்
எங்கேனும் எல்லைக்கோட்டை
தொட்டுவிட்டதாய்
சுட்டுவிடுவார்களோ என்று ......
இப்போதெல்லாம் இறக்கைகளின்
இறைஞ்சுதல் எல்லாம் - இந்த
உலகம் வேண்டாம்
இமயமலைகூட போதும்
இதயம் இளைப்பாறுவதற்கு...!!

