நடைப் பழகும் சூரியன்

வான்பார்த்துப் படுத்திருந்த நிலச்சூரியனா இன்று
மானென பழகுவது நடை..?

ராகமும் கீதமும் நடையில் கூட்டு
வேகமது ஊறு உனக்கு..

நடைப்பழகு தென்றலாய் நளினமாய் நன்று
மடை திறந்த வெள்ளம் ஊறு...

இப்படி அப்படி நடைப்பழகு -அன்றியும்
தப்படி தவிர். நலம்.

மோதும் பொருள் வழியிலுண்டு காண்
ஊது வழிக்கு தமிழால் .

பாதம் நோகுமுனக்கு நடையில் -மலர்ப்
பாதை என் நெஞ்சு.

வசீகரிக்கும் வளைவு நடை தவிர்
பரிகசிக்கும் பாதை தீது.

நாணலாய் நடைப்பழகு நன்று என்றும்
கோணல் அடி அழி.

எழுதியவர் : அகன் (6-Aug-14, 8:26 am)
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே