தேடல்

மறக்கப் படவேண்டிய
அத்தனை நினைவுகளும்
வாழ்வின் கோப்பையில்
நிரப்பப்பட்டு
மீண்டும் மீட்டப்பட்டு
நினைக்க வைக்கப் படுகிறதே
ஏன்?......!
ஆண்டவன் மீண்டும்
நினைப்பை நிழலை
நிஜமாக்க நினைக்கிறானோ?
கிணறுகள் தூறுவாரபட்டால்
நல்ல தண்ணீர் கிடைகும்
அதுபோல
நினைவுகள் தூருவாரப்பட்டால்???
ஆனந்தமோ?அழுகையோ?
கண்ணீர்தானே மிஞ்சும்
மெதுவாக நகர்ந்த
பேருந்து..... இருக்கை.....
இன்று
என்னருகே காலியாக
கண்ணீர் வடித்தது
மழை நீர் நனைத்து...
என்மனம் போலவே
அன்று
தொடருந்து இருக்கை.....
காதல் காவியமல்லவா
படைத்தது....
நாம் கைகோர்த்து
கதை பேசி
தலை சாய்த்து
எண்ணங்களை திண்ணங்களாக
பகிர்ந்து கொண்ட தருணம் அது
உன்விழிகளில் வேதனை ரேகைகளின்
மொழி அறிந்து பார்வைகளாலும்
பரிசங்களாலும் ஆறுதல்
ஆருடம் தந்த
கடற்கரை ....
அமர்ந்திருந்த கல் இருக்கை.....
அப்படியேதான் இருக்கிறது....
ஆனால் அனைத்தும்
நிதர்சனத்தில் நிறம்மாறி விட்டதெ....
நம்
காதலின் இருப்பை உறுதி செய்தது
வெளிவர எத்தனித்த ‘விழி நீர்........
என் விழிகளுக்கு முந்திகொண்டது
வான் மேகம் .......
நாம் அன்று
அமர்திருந்த இடமெல்லாம்
என் விழிக்காக கொட்டித் தீர்திருந்தது
மழைத்துளிகளை...
அங்கு
மெதுவாக நடை பயிலும் போது
அர்ப சந்தோசம் எனக்கு .......
உன் சுவாசக்காற்றும் இங்கு
எங்கோ கலந்திருக்கும்
அது
என்சுவசக்காற்ரோடாவது
இணைந்திருக்கும் என்று...
என்றாவது ஒரு நாள்
ஆண்டவனைத் தரிசித்து விடுவோம்
என ஆலையத்தில் அலை மோதும் பக்தர்களினை
போல நானும்
நாம் நடந்த இடம் எல்லாம்
நம் காதல்த் தடம் தேடி அலைகிறேன்
மறுமுறை ஒருமுறையாவது உன்னை
சந்திப்பேன் என
முடிந்தால்
மூச்சுப் போவதற்குள்
முகமாவது காட்டிவிட்டுப் போ.