மரணம்

எரிந்து கரையும்
மெழுகைப் போல்
தேகம் உருக

உறைந்து விறைக்கும்
நீரைப் போல்
மனம் இறுக

காற்றில் மிதக்கும்
சிறகைப் போல்
உயிர் பிரிய

உன் முகம் தேடுகிறேன்
என் உயிர் இணைய...

எழுதியவர் : சுதா வரா (12-Aug-14, 4:55 pm)
Tanglish : maranam
பார்வை : 122

மேலே