கவிதையில் காதல் சொன்னால்
கண்களை மூடி கொண்டால்
காட்சிகள் தெரியாது
உன் மௌனம் அதுபோலே
உடையாமல் காதல் வராது
என் நிலவே கண்மணியே
உன் நிழலும் ஒரு அழகே
கன்னி கனியமுதே
என் காதல் நீதானே
என்னை மரணம் நேசிக்குமுன்
உன் காதல் வந்திடுமா
கவிதையில் காதல் சொன்னால்
கேட்டிட கசந்திடுமா