இரவில் மலார்ந்த

பாதி இரவில் மலர்ந்த
பூவுக்கு இன்று இதழ்கள்
அறுபத்து எட்டு !

புதிய விதி செய வந்த
சுதந்திர வீதிக்கு
பாதைகள் நூறு !

பாதைகள் விரிகின்றன
பயணங்கள் தொடர்கின்றன !

பலருக்கு இன்னும்
பகலும் விடியவில்லை
பயணமும் துவங்கவில்லை !


தேசீய கீதத்தின் ராகம்
என்று ஏழையின்
ஆலாபனை ஆகும் ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Aug-14, 9:57 am)
பார்வை : 241

மேலே